ETV Bharat / state

’அதிமுக தொண்டர்களிடமிருந்து திமுகவை ஸ்டாலின் காப்பாற்றட்டும்’ : முதலமைச்சர் பழனிசாமி

author img

By

Published : Jan 3, 2021, 1:09 PM IST

ராமநாதபுரம்: அதிமுக தொண்டர்களிடமிருந்து திமுகவை ஸ்டாலின் காப்பாற்றிக் கொள்ளட்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

ராமநாதபுரம் சாயல்குடி அருகே நரிப்பையூர் தரவைப்பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்த தொற்று நோயை உலகளவில் ஒப்பிட்டால் தமிழ்நாடு கட்டுப்படுத்தியது. அதற்கு காரணம் அதிமுக அரசு. திண்டுக்கல்லில் இரண்டு கைகளை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் உயிரிழந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை படைத்தனர். அப்படிப்பட்ட மருத்துவர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.

அதிமுக அரசு ஏழை மக்கள் தங்களது சொந்த ஊரிலேயே மருத்துவம் பார்க்கும் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 மினி கிளினிக்குகளைக் கொண்டுவரவுள்ளது. இதில் முதுகுளத்தூரில் மட்டும் 12 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”வேளாண் உற்பத்தியில் தேசிய விருது பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதுமட்டுமல்ல உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதியளித்தார். காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்தால் இன்னும் 4 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை போல் விவசாயம் பெருகும்.

இனி வரும் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறபோகிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி என மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், திமுக தலைவர் திட்டமிட்டு அரசின் மீது புகார் அளிப்பதாகக் கூறினார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர், ”உழைத்து பதவிக்கு வர வேண்டும் குறுக்கு வழியில் பதவிக்கு வர முடியாது. அதிமுக மூன்றாக உடையும் என பேசிவரும் ஸ்டாலின் அதிமுக தொண்டர்களிடமிருந்து முதலில் திமுகவை காப்பாற்றிக் கொள்ளட்டும். கட்சியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்டாலின் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:‘தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை பொது மக்களிடம் நம்பிக்கை அளித்துள்ளது’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

ராமநாதபுரம் சாயல்குடி அருகே நரிப்பையூர் தரவைப்பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்த தொற்று நோயை உலகளவில் ஒப்பிட்டால் தமிழ்நாடு கட்டுப்படுத்தியது. அதற்கு காரணம் அதிமுக அரசு. திண்டுக்கல்லில் இரண்டு கைகளை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் உயிரிழந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை படைத்தனர். அப்படிப்பட்ட மருத்துவர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.

அதிமுக அரசு ஏழை மக்கள் தங்களது சொந்த ஊரிலேயே மருத்துவம் பார்க்கும் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 மினி கிளினிக்குகளைக் கொண்டுவரவுள்ளது. இதில் முதுகுளத்தூரில் மட்டும் 12 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”வேளாண் உற்பத்தியில் தேசிய விருது பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதுமட்டுமல்ல உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதியளித்தார். காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்தால் இன்னும் 4 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை போல் விவசாயம் பெருகும்.

இனி வரும் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறபோகிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி என மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், திமுக தலைவர் திட்டமிட்டு அரசின் மீது புகார் அளிப்பதாகக் கூறினார்.

திமுகவை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர், ”உழைத்து பதவிக்கு வர வேண்டும் குறுக்கு வழியில் பதவிக்கு வர முடியாது. அதிமுக மூன்றாக உடையும் என பேசிவரும் ஸ்டாலின் அதிமுக தொண்டர்களிடமிருந்து முதலில் திமுகவை காப்பாற்றிக் கொள்ளட்டும். கட்சியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்டாலின் மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:‘தடுப்பூசி பரிசோதனை ஒத்திகை பொது மக்களிடம் நம்பிக்கை அளித்துள்ளது’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.