ETV Bharat / state

100நாள் திட்டத்தில் சரவர ஊதியம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Jun 24, 2019, 9:58 PM IST

ராமநாதபுரம்: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கக் கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிற்குட்பட்ட வாத்தியனேந்தல், கர்நயடான், பனையடியேந்தல், உள்ளிட்ட கிராமங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைப் பார்த்து வருகின்றனர்.

தொடக்க காலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கான ஊதியம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது சில காலங்களாக பணம் முறையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்ததற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.

சரிவர சம்பளம் வழங்கக் கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்வதற்கான பணம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிற்குட்பட்ட வாத்தியனேந்தல், கர்நயடான், பனையடியேந்தல், உள்ளிட்ட கிராமங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைப் பார்த்து வருகின்றனர்.

தொடக்க காலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கான ஊதியம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது சில காலங்களாக பணம் முறையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்ததற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.

சரிவர சம்பளம் வழங்கக் கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்வதற்கான பணம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மனு அளித்தனர்.

Intro:ராமநாதபுரம் ஜூன் 24 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம பெண்கள்


Body:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிற்குட்பட்ட வாத்தியனேந்தல், கர்நயடான், பனையடியேந்தல், உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். தொடக்க காலங்களில் வேலை செய்ததற்கான ஊதியம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது சில காலங்களாக 100 நாள் திட்டத்தில் பணி செய்வதற்கான பணம் முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுவதில்லை என்றும் சிலருக்கு 50 ரூபாய் சிலருக்கு 30 ரூபாய் என்ற வீதமே வருவதாகவும் ஒரு வாரம் வேலை செய்தாலும் வெறும் 250 ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் ஏறுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக அந்த அதிகாரிகளிடம் கேட்டதற்கு இந்த அளவுதான் பணம் வந்ததாகவும் கூறியதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பெண்கள் தங்களது அட்டைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், மேலும் இந்த பகுதிகளில் சாலைகள் முறையாக இருந்தும் பேருந்து வசதி ,குடிநீர் வசதி கிடைப்பது இல்லை என்றும் இதற்கு முழு தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பேட்டி :மாலா
பேட்டி:காயத்ரி


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.