ETV Bharat / state

இளைஞர் வெட்டிக் கொலை - காவல் துறையினர் விசாரணை

author img

By

Published : Oct 15, 2019, 3:52 PM IST

புதுக்கோட்டை: அடப்பன்வயல் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயலைச் சேர்ந்தவர் வினோத் சக்கரவர்த்தி(27). நேற்றிரவு இவரது வீட்டருகே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை நகர காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயலைச் சேர்ந்தவர் வினோத் சக்கரவர்த்தி(27). நேற்றிரவு இவரது வீட்டருகே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை நகர காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கி பாதுகாப்புடன் நடந்த மொய்விருந்து: ரூ. 4கோடி வசூல்!:

Intro:புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை..Body:புதுக்கோட்டை அடப்பன்வயல் 3&ம் வீதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் மகன் வினேத் சக்கரவர்த்தி (27) வயதான இளைஞர் இன்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டின் அருகே மர்ம நபர்கள் 4 பேர் கழுத்து மற்றும் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். வெட்டுப்பட்ட வினோத் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வினோத்தின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலியான சம்பவத்திற்கு பலி தீர்க்கும் வகையில் இக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.