ETV Bharat / state

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி, இருவர் படுகாயம்

author img

By

Published : Oct 10, 2020, 10:37 PM IST

திருச்சி சிப்காட் அருகேயுள்ள ரெங்கம்மாள் சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில், சம்பவ இடத்திலே ஒருவர் பலியானார். இரண்டு பேர் உயிருக்குப் போராடிய நிலையில், அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

trichy sipcot accident
இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி, இருவர் படுகாயம்

திருச்சி: திருச்சி சிப்காட் அருகேயுள்ள ரெங்கம்மாள் சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். இரண்டு பேர் உயிருக்குப் போராடிய நிலையில், அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையிலிருந்து துடையூர் அருகேயுள்ள தக்கிரிப்பட்டியைச் சேர்ந்த கீர்த்திவாசன்(40) என்பவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியுள்ளது. இதில், கீர்த்திவாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அப்போது, சைக்கிளில் வந்த இருவர் மீதும் பேருந்து மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது

திருச்சி: திருச்சி சிப்காட் அருகேயுள்ள ரெங்கம்மாள் சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலே பலியானார். இரண்டு பேர் உயிருக்குப் போராடிய நிலையில், அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையிலிருந்து துடையூர் அருகேயுள்ள தக்கிரிப்பட்டியைச் சேர்ந்த கீர்த்திவாசன்(40) என்பவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியுள்ளது. இதில், கீர்த்திவாசன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அப்போது, சைக்கிளில் வந்த இருவர் மீதும் பேருந்து மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.