ETV Bharat / state

அத்தியாவசிய விளைபொருள்களின் விலை உயர்வு: வாழ்வாதாரம் இழக்கும் சாமானிய மக்கள்!

author img

By

Published : Oct 26, 2020, 6:05 PM IST

Updated : Oct 29, 2020, 5:05 PM IST

அத்தியாவசிய விளைபொருள்களின் விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு.

அத்தியாவசிய விளைபொருட்களின் விலை உயர்வு
அத்தியாவசிய விளைபொருட்களின் விலை உயர்வு

தற்போது இருக்கும் சூழ்நிலையில் கரோவுக்கு முன் கரோனவுக்குப் பின் என்று பிரிக்கக்கூடிய அளவிற்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் விலைவாசி உயர்வு. தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விலையும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு மக்கள்தொகை பெருக்கம்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில் கரோனா பாதிப்பும் ஒரு காரணமாகிவிட்டது.

என்னதான் அத்தியாவசிய பொருள்கள் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்தாலும்கூட விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளுக்குச் செல்லும்போது விலை இரட்டிப்பாகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய விளைபொருள்களின் திருத்த மசோதா அத்தியாவசிய பொருள்களிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை நீக்கியது. ஆனால் இந்த திருத்த மசோதா விவசாயிகளுக்கு அதிக ஆதாயத்தை தரும் என்ற நம்பிக்கையை மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் விவசாயிகளின் நிலை மாறியபாடில்லை.

அத்தியாவசிய பொருட்களின் உயர்வால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள்

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் (Essential Commodities Amendment Bill) வரும் அனைத்துப் பொருள்களின் விற்பனை, விலை, விநியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இது அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) தீர்மானிக்கிறது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பட்டியலில் இருக்கும்போதே இத்தகைய விளைபொருள்களின் பதுக்கல் அதிகளவு நடைபெறும் சூழலில், தற்போது அரசே இவற்றை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்குவதால் பதுக்கல் சர்வ சாதாரணமாக நடைபெறும் சூழல் உருவாகிறது.

இந்தச் சட்டத்திருத்தத்தால் விவசாயிகள் விளைபொருள்களை அதிகளவில் சேமித்துவைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியும் என்று அரசு விளக்கம் சொன்னாலும் இது இடைத்தரகர்களின் பதுக்கலுக்கும், விலைவாசி உயர்வுக்குமே, வழிவகுக்கும் என்பதே விவசாயிகளின் கவலையாக இருக்கிறது. இருப்பினும் செப்டம்பர் மாதம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. அத்தியாவசியமாகப் பயன்படும் சில பொருள்களின் தேவை அதிகரிக்கும்போது பொருள்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இரட்டிப்பாக விலை உயர்வை வியாபாரிகள் உருவாக்குகின்றனர்.

இந்த நிலை மாற மத்திய அரசு வியாபாரிகளுக்கு என விலை நிர்ணய சட்டத்தை கொண்டுவர வேண்டுமென்பதே விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட எண்ணெய் விலைகூட 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமன்றி பருப்பு வகைகள், தானிய வகைகள், அரிசி என அனைத்துமே 20% விலை உயர்வைக் கண்டுள்ளன. அரிசியின் விலை ஒருபுறம் அதிகரிக்க மற்றொரு புறம் பதுக்கலும், அரசு நெல் கொள்முதலை நிறுத்தமும் செய்துள்ளது.

சரி இந்த விலைவாசி உயர்வு சாமானிய மக்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று அலசும்போது பொதுமக்களின் கருத்தானது அதிர்ச்சியடையச் செய்கிறது. அதாவது, “பண வசதி இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். சாதாரண மக்கள், பாமர மக்கள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டில் 80% இருக்கின்றனர்.

இச்சூழ்நிலையில் விலைவாசி உயர்வு என்பது ஒரு குடும்பத்தையும், சமுதாயத்தையும் சிதைக்கக் கூடியதாக அமைகிறது. இறைச்சி வாங்க வேண்டுமென்றால்கூட வீட்டில் கணவன்-மனைவிக்குள் பிரச்னை வருகிறது காரணம் விலைவாசி உயர்வு. ஒரு குடும்பம்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும், அதனால் ஒவ்வொரு குடும்பத்தை பற்றி யோசித்து மத்திய அரசும், மாநில அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டு.ம் இதுவரையில் ஏறியதைவிட இனிமேலும் அதிக அளவில் விலைவாசி உயர்ந்தால் நிச்சயம் ஒரு சாமானிய மக்கள் வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமில்லை” எனக் கவலை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர் தனபதி கூறுகையில், ”அத்தியாவசிய விளைபொருள்கள் பட்டியலிலிருந்து வெங்காயம், எண்ணெய் வித்துக்கள், பருப்பு போன்றவற்றை நீக்கியதால்தான் தற்போது அதன் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இருந்த பதுக்கலைவிட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு வியாபாரிகளுக்கு என விலை நிர்ணய கட்டுப்பாட்டுச் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை யாரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இன்னும் அதன் விதிமுறைகளை அதிகப்படுத்தி செயல்படுத்த வேண்டும், அதிக விலைக்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நடைமுறைகளை உருவாக்கினால்தான் இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.

காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நாட்டில் உள்ள அனைவரும் தாம் இருக்கும் இடத்திலேயே அல்லது மாடியில் தோட்டம் உருவாக்கி காய்கறிகளை விவசாயம் செய்து பயன்படுத்தினால் செலவும் குறையும், காய்கறிகளின் விலை ஏற்றமும் இருக்காது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நைனா முகமது என்ற வியாபாரி, “மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைத்தான் நாங்கள் விற்பனை செய்கிறோம். அதை அவர்கள் உயர்த்தும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுக்கான லாபம் கிடைத்தால்தானே வியாபாரம் செய்ய முடியும்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விலைவாசி உயர்வைக் குறைத்தால்தான் வியாபாரிகளும் ஓரளவு லாபத்திற்கு விற்பனை செய்ய முடியும்” என்று கூறுகிறார்.

இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் அவகோடா பழம் விற்பனை: அசத்தும் மென்பொருள் பொறியாளர்!

தற்போது இருக்கும் சூழ்நிலையில் கரோவுக்கு முன் கரோனவுக்குப் பின் என்று பிரிக்கக்கூடிய அளவிற்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் விலைவாசி உயர்வு. தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விலையும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு மக்கள்தொகை பெருக்கம்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேலையில் கரோனா பாதிப்பும் ஒரு காரணமாகிவிட்டது.

என்னதான் அத்தியாவசிய பொருள்கள் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்தாலும்கூட விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளுக்குச் செல்லும்போது விலை இரட்டிப்பாகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய விளைபொருள்களின் திருத்த மசோதா அத்தியாவசிய பொருள்களிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை நீக்கியது. ஆனால் இந்த திருத்த மசோதா விவசாயிகளுக்கு அதிக ஆதாயத்தை தரும் என்ற நம்பிக்கையை மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் விவசாயிகளின் நிலை மாறியபாடில்லை.

அத்தியாவசிய பொருட்களின் உயர்வால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள்

அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின்கீழ் (Essential Commodities Amendment Bill) வரும் அனைத்துப் பொருள்களின் விற்பனை, விலை, விநியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இது அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) தீர்மானிக்கிறது. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பட்டியலில் இருக்கும்போதே இத்தகைய விளைபொருள்களின் பதுக்கல் அதிகளவு நடைபெறும் சூழலில், தற்போது அரசே இவற்றை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலிலிருந்து நீக்குவதால் பதுக்கல் சர்வ சாதாரணமாக நடைபெறும் சூழல் உருவாகிறது.

இந்தச் சட்டத்திருத்தத்தால் விவசாயிகள் விளைபொருள்களை அதிகளவில் சேமித்துவைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியும் என்று அரசு விளக்கம் சொன்னாலும் இது இடைத்தரகர்களின் பதுக்கலுக்கும், விலைவாசி உயர்வுக்குமே, வழிவகுக்கும் என்பதே விவசாயிகளின் கவலையாக இருக்கிறது. இருப்பினும் செப்டம்பர் மாதம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது. அத்தியாவசியமாகப் பயன்படும் சில பொருள்களின் தேவை அதிகரிக்கும்போது பொருள்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இரட்டிப்பாக விலை உயர்வை வியாபாரிகள் உருவாக்குகின்றனர்.

இந்த நிலை மாற மத்திய அரசு வியாபாரிகளுக்கு என விலை நிர்ணய சட்டத்தை கொண்டுவர வேண்டுமென்பதே விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட எண்ணெய் விலைகூட 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுமட்டுமன்றி பருப்பு வகைகள், தானிய வகைகள், அரிசி என அனைத்துமே 20% விலை உயர்வைக் கண்டுள்ளன. அரிசியின் விலை ஒருபுறம் அதிகரிக்க மற்றொரு புறம் பதுக்கலும், அரசு நெல் கொள்முதலை நிறுத்தமும் செய்துள்ளது.

சரி இந்த விலைவாசி உயர்வு சாமானிய மக்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று அலசும்போது பொதுமக்களின் கருத்தானது அதிர்ச்சியடையச் செய்கிறது. அதாவது, “பண வசதி இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். சாதாரண மக்கள், பாமர மக்கள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டில் 80% இருக்கின்றனர்.

இச்சூழ்நிலையில் விலைவாசி உயர்வு என்பது ஒரு குடும்பத்தையும், சமுதாயத்தையும் சிதைக்கக் கூடியதாக அமைகிறது. இறைச்சி வாங்க வேண்டுமென்றால்கூட வீட்டில் கணவன்-மனைவிக்குள் பிரச்னை வருகிறது காரணம் விலைவாசி உயர்வு. ஒரு குடும்பம்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும், அதனால் ஒவ்வொரு குடும்பத்தை பற்றி யோசித்து மத்திய அரசும், மாநில அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டு.ம் இதுவரையில் ஏறியதைவிட இனிமேலும் அதிக அளவில் விலைவாசி உயர்ந்தால் நிச்சயம் ஒரு சாமானிய மக்கள் வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமில்லை” எனக் கவலை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர் தனபதி கூறுகையில், ”அத்தியாவசிய விளைபொருள்கள் பட்டியலிலிருந்து வெங்காயம், எண்ணெய் வித்துக்கள், பருப்பு போன்றவற்றை நீக்கியதால்தான் தற்போது அதன் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இருந்த பதுக்கலைவிட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு வியாபாரிகளுக்கு என விலை நிர்ணய கட்டுப்பாட்டுச் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை யாரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. இன்னும் அதன் விதிமுறைகளை அதிகப்படுத்தி செயல்படுத்த வேண்டும், அதிக விலைக்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நடைமுறைகளை உருவாக்கினால்தான் இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.

காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நாட்டில் உள்ள அனைவரும் தாம் இருக்கும் இடத்திலேயே அல்லது மாடியில் தோட்டம் உருவாக்கி காய்கறிகளை விவசாயம் செய்து பயன்படுத்தினால் செலவும் குறையும், காய்கறிகளின் விலை ஏற்றமும் இருக்காது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து நைனா முகமது என்ற வியாபாரி, “மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைத்தான் நாங்கள் விற்பனை செய்கிறோம். அதை அவர்கள் உயர்த்தும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுக்கான லாபம் கிடைத்தால்தானே வியாபாரம் செய்ய முடியும்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விலைவாசி உயர்வைக் குறைத்தால்தான் வியாபாரிகளும் ஓரளவு லாபத்திற்கு விற்பனை செய்ய முடியும்” என்று கூறுகிறார்.

இதையும் படிங்க: ஆன்லைன் மூலம் அவகோடா பழம் விற்பனை: அசத்தும் மென்பொருள் பொறியாளர்!

Last Updated : Oct 29, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.