ETV Bharat / state

மதச்சார்பற்றக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது - எம்.பி., திருநாவுக்கரசர்

author img

By

Published : Apr 6, 2021, 5:07 PM IST

புதுக்கோட்டை: தீயத்தூரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

Thirunavukarasar mp
திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தீயத்தூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், " தமிழ்நாட்டில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் சற்று சோர்வாகச் செயல்பட்டாலும், தன்னால் முடிந்த அளவிற்கு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதற்கு நன்றி. மேலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணி, அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தீயத்தூரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் வாக்கு செலுத்தினார்

நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான ஒரு அலை வீசியதில், 99 விழுக்காடு திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. அதே போல, தமிழ்நாட்டில் பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் எதிரான அலை வீசுவதால், சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். அதிமுக சார்பில் எல்லாத் தொகுதிகளுக்கும் முன்கூட்டியே பணம் அனுப்பப்பட்டு மக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி இருப்பதால், திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி" என்றார்.

இதையும் படிங்க: கார்த்திகேய சிவசேனாபதி சீன் போடுகிறார்- எஸ்.பி. வேலுமணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தீயத்தூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர், அறந்தாங்கி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், " தமிழ்நாட்டில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் சற்று சோர்வாகச் செயல்பட்டாலும், தன்னால் முடிந்த அளவிற்கு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதற்கு நன்றி. மேலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணி, அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தீயத்தூரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் வாக்கு செலுத்தினார்

நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான ஒரு அலை வீசியதில், 99 விழுக்காடு திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. அதே போல, தமிழ்நாட்டில் பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் எதிரான அலை வீசுவதால், சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். அதிமுக சார்பில் எல்லாத் தொகுதிகளுக்கும் முன்கூட்டியே பணம் அனுப்பப்பட்டு மக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி இருப்பதால், திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி" என்றார்.

இதையும் படிங்க: கார்த்திகேய சிவசேனாபதி சீன் போடுகிறார்- எஸ்.பி. வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.