ETV Bharat / bharat

கேரளாவில் கோர விபத்து: சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு! - KERALA ACCIDENT

திருச்சூர் அருகே சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது லாரி ஏறிய இறங்கிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த பகுதி மற்றும் லாரி
விபத்து நடந்த பகுதி மற்றும் லாரி (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 8:17 AM IST

கேரளா : திருச்சூர் மாநிலம் நாட்டிகா பகுதியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது இன்று அதிகாலை 4 மணியளவில், லாரி ஏறிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, இன்று (நவ.26) அதிகாலை 4 மணியளவில் ஜேகே சினிமாஸ் திரையரங்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியுள்ளது.

அந்த கோர விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையைத் தொடர்ந்து.. மதுரை அதிமுக கள ஆய்வு கூட்டத்திலும் சலசலப்பு!

அதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த காளியப்பன் (50), ஜீவன் (4), நாகம்மா (39), பெங்காலி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும், அவருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதனால், கண்ணூர் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜோஸ் (54) மற்றும் கிளீனர் அலெக்ஸ் (33) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கேரளா : திருச்சூர் மாநிலம் நாட்டிகா பகுதியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது இன்று அதிகாலை 4 மணியளவில், லாரி ஏறிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, இன்று (நவ.26) அதிகாலை 4 மணியளவில் ஜேகே சினிமாஸ் திரையரங்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியுள்ளது.

அந்த கோர விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையைத் தொடர்ந்து.. மதுரை அதிமுக கள ஆய்வு கூட்டத்திலும் சலசலப்பு!

அதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில், லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த காளியப்பன் (50), ஜீவன் (4), நாகம்மா (39), பெங்காலி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும், அவருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதனால், கண்ணூர் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜோஸ் (54) மற்றும் கிளீனர் அலெக்ஸ் (33) இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.