ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு - Temple protest

புதுக்கோட்டை: திருவரங்குளம் அருகே உள்ள அரங்குளநாதர் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

peoples protest
author img

By

Published : May 11, 2019, 3:33 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் மே 9ஆம் தேதி தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா மே 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இரண்டாம் நாள் திருவிழா நேற்று மண்டகப்படிதாரர்கள் நிகழ்வாக நடைபெறும். அதை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த நாளில் சாமி ஊர்வலம் அம்பாளை சப்பரத்தில் ஏற்றி திருவரங்குளத்தில் தொடங்கி வம்பன் வீரமாகாளி அம்மன் கோயிலில் கொண்டுபோய் வைக்கப்பட்டு, அங்கு மண்டகப்படிதாரர்கள் வந்து கடவுளை வணங்கி அருள் பெற்றுச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதில் ஒருதரப்பினர் தங்களுக்கு மட்டும்தான் சாமிக்கு பணிவிடைகள் செய்ய உரிமை உள்ளது என்றும், மற்றவர்களுக்கு சாமியை வணங்கி செல்லலாம் என்று கூறினர். இதனால் இருதரப்பினருக்கு இடையே பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அதைக் காரணம் காட்டி 2018ஆம் ஆண்டு சிறப்பு விழாவான இரண்டாம் மண்டகப்படிக்கு காவல் துறையிடமிருந்து அனுமதி மறுக்கப்பட்டதால் சாமி ஊர்வலம் நடக்கவில்லை.

இந்நிலையில் இந்தாண்டும் சாமி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதையடுத்து அங்குவந்த ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்தப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பதாக காவல் துறையினர் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் மே 9ஆம் தேதி தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா மே 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இரண்டாம் நாள் திருவிழா நேற்று மண்டகப்படிதாரர்கள் நிகழ்வாக நடைபெறும். அதை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த நாளில் சாமி ஊர்வலம் அம்பாளை சப்பரத்தில் ஏற்றி திருவரங்குளத்தில் தொடங்கி வம்பன் வீரமாகாளி அம்மன் கோயிலில் கொண்டுபோய் வைக்கப்பட்டு, அங்கு மண்டகப்படிதாரர்கள் வந்து கடவுளை வணங்கி அருள் பெற்றுச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதில் ஒருதரப்பினர் தங்களுக்கு மட்டும்தான் சாமிக்கு பணிவிடைகள் செய்ய உரிமை உள்ளது என்றும், மற்றவர்களுக்கு சாமியை வணங்கி செல்லலாம் என்று கூறினர். இதனால் இருதரப்பினருக்கு இடையே பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அதைக் காரணம் காட்டி 2018ஆம் ஆண்டு சிறப்பு விழாவான இரண்டாம் மண்டகப்படிக்கு காவல் துறையிடமிருந்து அனுமதி மறுக்கப்பட்டதால் சாமி ஊர்வலம் நடக்கவில்லை.

இந்நிலையில் இந்தாண்டும் சாமி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதையடுத்து அங்குவந்த ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்தப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பதாக காவல் துறையினர் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Intro:புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள பாம்பன் நால் ரோடு பகுதியில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சாலை மறியல்..


Body:திருவரங்குளம் அரங்குளநாதர் பெரியநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காப்புக்கட்டுதலுடன் கூடிய திருவிழாக்கள் 9.5.2019 இல் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேரோட்ட திருவிழா வரும் 17.5. 2019 அன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் திருவிழா இன்று மண்டகப்படிதாரர்கள் நிகழ்வாக நடைபெறும் அதை முன்னிட்டு ஆண்டுதோறும் இரண்டாம்நாள் திருவிழாவிற்காக சாமி ஊர்வலம் அம்பாளை சப்பரத்தில் ஏற்றி திருவரங்குளத்தில் தொடங்கி வம்பன் வீரமாகாளி அம்மன் கோவிலில் கொண்டு போய் வைக்கப்பட்டுவிடும் அங்கு இரண்டாம் நாள் மண்டகப்படிதாரர்கள் வந்து கடவுளை வணங்கி அருள் பெற்றுச் செல்வது வழக்கம் இது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக சாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

அதன்படி திருவரங்குளம் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 22 கிராமங்களில் இரண்டாம் நாள் மண்டகப்படியை வீர பட்டியைச் சேர்ந்த சில குடும்பங்களுக்கு மட்டும்தான் பாத்தியதை உள்ளது மற்றவர்கள் வந்து வணங்கி செல்லலாம் மற்றவர்களுக்கு சாமிக்கு செய்ய வேண்டிய உரிமைகள் கிடையாது என்று மண்டகப்படிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் அதை காரணம் காட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு சிறப்பு விழா விற்கு இரண்டாம் மண்டகப்படிக்கு காவல்துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டதால் கடந்த ஆண்டு சாமி ஊர்வலம் நடக்க வில்லை. அதனால் இந்த ஆண்டு திருவிழா அவருக்கு கட்டாயம் ஊர்வலம் நடத்த வேண்டுமென்று முடிவெடுத்த கொத்த கோட்டை, மாஞ்சன் விடுதி, பாப்பம்பட்டி ரொம்ப நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முடிவெடுத்து காவல்துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை நாடு இருக்கிறார்கள்.

இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்ததில் இரண்டாம் நாள் திருவிழா நடத்தப்படாததால் இந்த ஆண்டும் அதையே கடைப்பிடிக்க மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என வே சாமி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்று மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இன்று மாலை ரொம்ப நாள் ரோடு என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியல் செய்தனர் இதனால் சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதுக்கோட்டை கோட்டாட்சியர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதுடன் சாலை மறியல் கைவிடப்பட்டது. அதனால் சுமார் ஒரு மணிநேரம் புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினை குறித்து மாஞ்சான்விடுதி ஊர் பெரியவர் ஆசைத்தம்பி என்பவர் கூறுகையில்,
இரண்டாம் நாள் மண்டகப்படி நிகழ்ச்சியை இந்தப் பகுதி மக்கள் நடத்துவது காலம் காலமாக நடந்து வருவதாகும் 1959 ஆம் ஆண்டு வரை சாமியை சம்பளத்தில் வைத்து ரொம்ப நாள் ரோடுவரை கொண்டு வருவோம் அதைத்தாண்டி சாலை வசதிகள் இல்லாததால் சாமியை மட்டும் தோளில் சுமந்து கொண்டு போய் மாணவர் விடுதி குளத்துக் கரையில் வைத்து செய்யவேண்டிய செய்முறைகளை செய்து வணங்குவோம் இதில் இரண்டாம் நாள் மண்டகப்படி கூறிய கிராமத்தார்கள் அனைவரும் ஒன்று சேர்வார்கள் யாருக்கும் எந்த ஒரு கருத்து மாறுபாடு இருந்ததில்லை.
அனைத்து சமூகத்தினரும் கோவில் தேரை கோவில் வளாகத்தில் வைத்து ஒன்று சேர்ந்து வணங்கி மகிழ்வது வழக்கம் இதற்கிடையில் எந்த ஒரு சாதி சாயம் இன வேதமும் வந்ததில்லை அனைவரும் ஒற்றுமையாக தான் இருந்து வணங்குவோம் ஆனால் கடந்த ஆண்டு சிலரின் சதியால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது அதிலிருந்து சாதி சார்ந்து பிரச்சனையை கிளப்பி விட்டார்கள் நாட்டில் பிறந்த அனைவரும் ஒன்றுதான் இதனால் அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.