ETV Bharat / state

ஊராட்சி அளவில் சாதனை படைத்த 'குழிப்பிறை' - ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் திட்டம்!

author img

By

Published : Jun 11, 2023, 4:18 PM IST

Updated : Jun 11, 2023, 8:14 PM IST

தனது ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாகக் கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சித்து வரும் குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவர் அழகப்பனின் செயல்பாடுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அதிக வரி வசூலால் சாதனை.. குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவரின் இலக்கு என்ன?
அதிக வரி வசூலால் சாதனை.. குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவரின் இலக்கு என்ன?

தனது ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாகக் கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சித்து வரும் குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவர் அழகப்பனின் செயல்பாடுகள் குறித்த செய்தித் தொகுப்பு

புதுக்கோட்டை: திருமயம் தாலுகாவிற்கு உட்பட்டது குழிபிறை ஊராட்சி. இந்த குழிபிறை ஊராட்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவராக அழகப்பன் என்பவர் இருந்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தான் சார்ந்த குழிபிறை ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பதவிக்கு வந்ததாக கூறுகிறார்.

இதில், மக்களின் தேவையாக முதலில் கையில் எடுத்த விஷயம், குடிநீர். பொதுவாக பொதுமக்களின் அடிப்படைத் தேவையாக விளங்கும் குடிநீருக்காக குழிபிறை ஊராட்சியில் 2 லட்சத்து 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 9 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளது. இதில் 6 தொட்டிகள் நல்ல முறையில் இயங்கி வந்துள்ளது.

மற்ற மூன்று தொட்டிகள் 1970ஆம் ஆண்டு, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள். எனவே, அந்த 3 தொட்டிகளையும் பொதுப்பணித்துறை ஒப்புதலோடு சீரமைத்து, 9 தொட்டிகளையும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அன்றாடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீரை வழங்கி வருகிறார்.

இதில் அடுத்த கட்டமாக, கடந்த ஆண்டு நம் நாட்டில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அழகப்பன் கலந்து கொண்டார். அப்போது, அங்கு உலக ஒற்றுமை மற்றும் தேசப்பற்றை பொதுமக்களிடம் வளர்க்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட சிந்தனைதான் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக் கொடியை வரைவது என அழகப்பன் கூறுகிறார். இந்த தேசியக்கொடி ஓவியம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், தேசப்பற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், குழிபிறை கிராமத்திற்குள் நுழையும்போது நம்மை வரவேற்கும் விதமாக உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தேசியக்கொடி ஓவியம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை கவர்கிறது. அந்த ஓவியத்தை பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதும், செல்பி எடுப்பதும், அதை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி, பொதுமக்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக 3 நாட்கள் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், குழிபிறை ஊராட்சியில் தேசியக்கொடி காலம் முழுவதும் ஓவியத்தால் பொதுமக்கள் மனதில் வரையப்பட்டுள்ளது.

மேலும், இந்த கிராமத்திற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் செயல்படக் கூடிய மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கும் பகுதியில் உள்ள கல்லுக்காலில் தேசியக்கொடி வர்ணத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதில் மக்கும் குப்பையைப் பயன்படுத்தி உரம் தயாரித்து, இந்த பகுதி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் விற்பனையும், மக்காத குப்பையான கண்ணாடி பாட்டில் பிளாஸ்டிக் ஆகியவற்றை விற்று மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் ஊராட்சிக்கு வருவாய் ஈட்டியும் வருகிறார்.

மேலும், மக்காத குப்பையான பிளாஸ்டிக், இங்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அழகப்பன் கூறுகிறார். அதேபோல் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் வரி வசூலில் குழிபிறை ஊராட்சியில் கிட்டத்தட்ட வருடத்திற்கு 13 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்து வருகிறது.

மேலும் இது குறித்து குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவர் அழகப்பன் கூறுகையில், “தற்போது அரசு ஆன்லைன் மூலமாக வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, முதல் ஊராட்சியாக குழிபிறை ஊராட்சியில் ஆன்லைன் வரி வசூலை தொடங்கி உள்ளோம்.

எந்த அளவிற்கு வரி வசூல் செய்து அரசுக்கு செலுத்துகின்றோமோ, அதற்கு மூன்று மடங்காக அரசு அந்த ஊராட்சிக்கு நிதியை அளிக்க உள்ளது. அப்போதுதான் அந்த ஊராட்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். அந்த அடிப்படையில், பொதுமக்களிடையே வரி செலுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, முழுமையான வரி வசூலை நாங்கள் செய்து வருகிறோம்.

இது போன்ற அதிகமான வரி வசூல் செய்து அரசுக்கு அளிப்பதன் மூலம், அரசு திரும்பத் தரும் நிதியைக் கொண்டு ஊராட்சியை சிறந்த முறையில் வழிநடத்த முடியும் என்று மற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களும் புரிந்து கொண்டு, வரி வசூலை அதிகப்படுத்த வேண்டும்.

அரசு கொடுக்கும் நிதியைப் பயன்படுத்தி குழிபிறை ஊராட்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து, தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் முதன்மையான ஊராட்சியாக குழிபிறை ஊராட்சியை ஆக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்” என்றார்.

இதையும் படிங்க: "ரொம்ப சீன் போடாதீங்க தம்பி" - மனு கொடுக்க வந்தவரிடம் ஆவேசமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன்!

தனது ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாகக் கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சித்து வரும் குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவர் அழகப்பனின் செயல்பாடுகள் குறித்த செய்தித் தொகுப்பு

புதுக்கோட்டை: திருமயம் தாலுகாவிற்கு உட்பட்டது குழிபிறை ஊராட்சி. இந்த குழிபிறை ஊராட்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவராக அழகப்பன் என்பவர் இருந்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தான் சார்ந்த குழிபிறை ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பதவிக்கு வந்ததாக கூறுகிறார்.

இதில், மக்களின் தேவையாக முதலில் கையில் எடுத்த விஷயம், குடிநீர். பொதுவாக பொதுமக்களின் அடிப்படைத் தேவையாக விளங்கும் குடிநீருக்காக குழிபிறை ஊராட்சியில் 2 லட்சத்து 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 9 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளது. இதில் 6 தொட்டிகள் நல்ல முறையில் இயங்கி வந்துள்ளது.

மற்ற மூன்று தொட்டிகள் 1970ஆம் ஆண்டு, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள். எனவே, அந்த 3 தொட்டிகளையும் பொதுப்பணித்துறை ஒப்புதலோடு சீரமைத்து, 9 தொட்டிகளையும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அன்றாடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீரை வழங்கி வருகிறார்.

இதில் அடுத்த கட்டமாக, கடந்த ஆண்டு நம் நாட்டில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அழகப்பன் கலந்து கொண்டார். அப்போது, அங்கு உலக ஒற்றுமை மற்றும் தேசப்பற்றை பொதுமக்களிடம் வளர்க்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட சிந்தனைதான் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக் கொடியை வரைவது என அழகப்பன் கூறுகிறார். இந்த தேசியக்கொடி ஓவியம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், தேசப்பற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், குழிபிறை கிராமத்திற்குள் நுழையும்போது நம்மை வரவேற்கும் விதமாக உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தேசியக்கொடி ஓவியம், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை கவர்கிறது. அந்த ஓவியத்தை பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதும், செல்பி எடுப்பதும், அதை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி, பொதுமக்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக 3 நாட்கள் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், குழிபிறை ஊராட்சியில் தேசியக்கொடி காலம் முழுவதும் ஓவியத்தால் பொதுமக்கள் மனதில் வரையப்பட்டுள்ளது.

மேலும், இந்த கிராமத்திற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் செயல்படக் கூடிய மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கும் பகுதியில் உள்ள கல்லுக்காலில் தேசியக்கொடி வர்ணத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதில் மக்கும் குப்பையைப் பயன்படுத்தி உரம் தயாரித்து, இந்த பகுதி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் விற்பனையும், மக்காத குப்பையான கண்ணாடி பாட்டில் பிளாஸ்டிக் ஆகியவற்றை விற்று மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் ஊராட்சிக்கு வருவாய் ஈட்டியும் வருகிறார்.

மேலும், மக்காத குப்பையான பிளாஸ்டிக், இங்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அழகப்பன் கூறுகிறார். அதேபோல் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் வரி வசூலில் குழிபிறை ஊராட்சியில் கிட்டத்தட்ட வருடத்திற்கு 13 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்து வருகிறது.

மேலும் இது குறித்து குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவர் அழகப்பன் கூறுகையில், “தற்போது அரசு ஆன்லைன் மூலமாக வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, முதல் ஊராட்சியாக குழிபிறை ஊராட்சியில் ஆன்லைன் வரி வசூலை தொடங்கி உள்ளோம்.

எந்த அளவிற்கு வரி வசூல் செய்து அரசுக்கு செலுத்துகின்றோமோ, அதற்கு மூன்று மடங்காக அரசு அந்த ஊராட்சிக்கு நிதியை அளிக்க உள்ளது. அப்போதுதான் அந்த ஊராட்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். அந்த அடிப்படையில், பொதுமக்களிடையே வரி செலுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, முழுமையான வரி வசூலை நாங்கள் செய்து வருகிறோம்.

இது போன்ற அதிகமான வரி வசூல் செய்து அரசுக்கு அளிப்பதன் மூலம், அரசு திரும்பத் தரும் நிதியைக் கொண்டு ஊராட்சியை சிறந்த முறையில் வழிநடத்த முடியும் என்று மற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களும் புரிந்து கொண்டு, வரி வசூலை அதிகப்படுத்த வேண்டும்.

அரசு கொடுக்கும் நிதியைப் பயன்படுத்தி குழிபிறை ஊராட்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து, தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் முதன்மையான ஊராட்சியாக குழிபிறை ஊராட்சியை ஆக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்” என்றார்.

இதையும் படிங்க: "ரொம்ப சீன் போடாதீங்க தம்பி" - மனு கொடுக்க வந்தவரிடம் ஆவேசமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன்!

Last Updated : Jun 11, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.