புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயலைச் சேர்ந்த சந்தானம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் சொத்துப் பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சந்தானம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மூர்த்தி, மணிகண்டன், கடல் விஜய், திருமுருகன், ஆகிய நான்கு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சந்தானம் கொலை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து மணிகண்டன், கடல் விஜய், திருமுருகன் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அப்த்துல் மாலிக் தீர்ப்பு அளித்தார். மேலும், குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாததால் மூர்த்தி இந்த வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்தார்.
இதையும் படிங்க: மகனின் சாவில் மர்மம்: தாய் காவல் ஆணையரிடம் புகார்..!