ETV Bharat / state

'பருவமழை எங்களை ஏமாற்றிவிட்டது...!' - கதறி அழுத விவசாயி

author img

By

Published : Nov 8, 2022, 10:21 PM IST

ஆண்டிற்கு ஒருமுறை பெய்யும் வடகிழக்குப் பருவமழையானது இம்முறை தங்கள் மாவட்டத்தை ஏமாற்றிவிட்டதாக புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு தங்களின் வேதனையைத் தெரிவித்துள்ளனர்.

Special: ’பருவமழை எங்களை ஏமாற்றிவிட்டது...!’ - கதறி அழுத விவசாயி
Special: ’பருவமழை எங்களை ஏமாற்றிவிட்டது...!’ - கதறி அழுத விவசாயி

புதுக்கோட்டை: வடகிழக்குப் பருவமழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழை ஏமாற்றி விட்டதாகவே சொல்லலாம்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஏழு நாட்களுக்கு மேல் ஆகிய நிலையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தமட்டில், அதிகபட்சமாக மழை பெய்தால் 10 நிமிடங்களுக்கு மேல் பெய்யாமல் இருப்பதாலும் மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே மழை பெய்வதாலும் அம்மாவட்ட விவசாயிகள் கதறி அழுகின்றனர்.

வடகிழக்குப் பருவங்களை எதிர்பார்த்து விவசாயம் செய்த விவசாயிகள் மழை போதுமான அளவு இல்லாததால் நாற்றுகளை ஆங்காங்கே வயல்களில் வீசி வருவதைக் காணலாம்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது கிணற்று நீர் அல்லது போர் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த வருடங்களில் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்ததாகவும் தற்போது வருண பகவான் எங்களை ஏமாற்றிவிட்டதாகவும் கதறினர். கடந்த வருடங்களில் நெல், கரும்பு உள்ளிட்ட சாகுபடிகள் செய்தோம்; ஆனால் இந்த வருடம் தண்ணீர் இல்லாததால் வேர்க்கடலையை நடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சொல்லப்போனால் உரங்கள் தட்டுப்பாடும் அதிக அளவில் நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உரங்கள் தட்டுப்பாட்டிலும் அப்படி உரங்கள் கிடைத்தாலும் அதிக விலைக்கு வைத்து விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு உரங்களின் தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும் எனவும்; போதுமான அளவு விவசாயிகளுக்கு கிடைக்கப்படுகிறதா...? என்றும் ஒரு அதிகாரிகளை நியமித்துப் பார்வையிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'பருவமழை எங்களை ஏமாற்றிவிட்டது...!' - கதறி அழுத விவசாயி

பின்னர் இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டபோது குளங்களைச்சுற்றி, அதிக அளவில் சீமைக் கருவேலை மரங்கள் இருப்பதாலும் அதை உடனடியாக அரசாங்கம் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி - வைகை - குண்டாறு திட்டம் விராலிமலை மற்றும் மணப்பாறை தொகுதி மக்களுக்குப் பயனுள்ளதாக அமையவில்லை என்றும் வேதனைத்தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 60 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு

புதுக்கோட்டை: வடகிழக்குப் பருவமழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழை ஏமாற்றி விட்டதாகவே சொல்லலாம்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஏழு நாட்களுக்கு மேல் ஆகிய நிலையிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தமட்டில், அதிகபட்சமாக மழை பெய்தால் 10 நிமிடங்களுக்கு மேல் பெய்யாமல் இருப்பதாலும் மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே மழை பெய்வதாலும் அம்மாவட்ட விவசாயிகள் கதறி அழுகின்றனர்.

வடகிழக்குப் பருவங்களை எதிர்பார்த்து விவசாயம் செய்த விவசாயிகள் மழை போதுமான அளவு இல்லாததால் நாற்றுகளை ஆங்காங்கே வயல்களில் வீசி வருவதைக் காணலாம்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது கிணற்று நீர் அல்லது போர் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த வருடங்களில் வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்ததாகவும் தற்போது வருண பகவான் எங்களை ஏமாற்றிவிட்டதாகவும் கதறினர். கடந்த வருடங்களில் நெல், கரும்பு உள்ளிட்ட சாகுபடிகள் செய்தோம்; ஆனால் இந்த வருடம் தண்ணீர் இல்லாததால் வேர்க்கடலையை நடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சொல்லப்போனால் உரங்கள் தட்டுப்பாடும் அதிக அளவில் நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உரங்கள் தட்டுப்பாட்டிலும் அப்படி உரங்கள் கிடைத்தாலும் அதிக விலைக்கு வைத்து விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் தலையிட்டு உரங்களின் தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும் எனவும்; போதுமான அளவு விவசாயிகளுக்கு கிடைக்கப்படுகிறதா...? என்றும் ஒரு அதிகாரிகளை நியமித்துப் பார்வையிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'பருவமழை எங்களை ஏமாற்றிவிட்டது...!' - கதறி அழுத விவசாயி

பின்னர் இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டபோது குளங்களைச்சுற்றி, அதிக அளவில் சீமைக் கருவேலை மரங்கள் இருப்பதாலும் அதை உடனடியாக அரசாங்கம் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி - வைகை - குண்டாறு திட்டம் விராலிமலை மற்றும் மணப்பாறை தொகுதி மக்களுக்குப் பயனுள்ளதாக அமையவில்லை என்றும் வேதனைத்தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 60 அடி கிணற்றுக்குள் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.