ETV Bharat / state

புதுக்கோட்டையில் ஒரு அத்திப்பட்டி ! - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டி கிராமம்

புதுக்கோட்டை: சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போலவே, உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீரின்றி பெரும் அவதிப்பட்டு வரும் கிராமம்தான் ‘தச்சன்வயல்’.

தண்ணீரால் சூழ்ந்துள்ள தச்சன்வயல் கிராமம்
தண்ணீரால் சூழ்ந்துள்ள தச்சன்வயல் கிராமம்
author img

By

Published : Dec 25, 2019, 10:56 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது தச்சன்வயல் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். புதுக்கோட்டையின் அருகிலேயே இந்த ஊர் இருந்தாலும்கூட ‘சிட்டிசன்’ திரைப்படத்தில் வருவதுபோல் ‘அத்திப்பட்டி’ கிராமமாகத்தான் இருந்து வருகிறது.

ஏனென்றால், இந்த கிராமத்தில் குடி தண்ணீர் கிடையாது, சாலை கிடையாது, யாரேனும் இறந்து விட்டால் மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை கிடையாது. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் எங்கு செல்ல வேண்டுமானாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ஊரின் அருகே குண்டாறு செல்வதால் அந்த ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் தச்சன்வயல் எனும் கிராமத்தை சூழ்ந்துள்ளது.

தண்ணீரால் சூழ்ந்துள்ள தச்சன்வயல் கிராமம்

இதனால், மழை காலம் மட்டுமின்றி நிகழ் காலத்திலும் இதே நிலைமைதான் நிலவி வருகிறது. மேலும், அருகில் நெல் அவிக்கும் தொழிற்சாலை இருப்பதால் அதிலிருந்து வரும் கழிவுகள் இந்த ஊரின் அருகே உள்ள ஆற்றில் கலப்பதால் அந்த ஆற்றில் மக்கள் நடந்து செல்லும்போது உடல் நலக்குறைவு, கால்களில் சிரங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது;

நேற்று, இன்று மட்டும் இந்த பிரச்சனை நடைபெறுவதில்லை. காலங்காலமாக இப்படித்தான் நடந்துவருகிறது. ஆம்புலன்ஸ் வருவதற்குக்கூட இந்த ஊரில் வழி கிடையாது. இருசக்கர வாகனம் செல்வதற்குக்கூட சாலை கிடையாது. இந்த கிராமத்தை ஆற்றுநீர் சூழ்ந்து இருப்பதால் இடுப்பளவு தண்ணீரில் கடந்து செல்ல வேண்டும். ஒரு பாலம்கூட கிடையாது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எத்தனையோ முறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் ஊரைச் சுற்றி பொதுக் கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எதுவுமே கிடையாது. எதுவாக இருந்தாலும் 5 கிலோ மீட்டர் 10 கிலோமீட்டர் தூரம் தள்ளி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. யாரேனும் இறந்தால்கூட ஆற்றைக் கடந்து, குளத்தின் நடுவே கழுத்தளவு தண்ணீரில் உடலை கொண்டுபோய்தான் அடக்கம் செய்ய வேண்டும். இந்த அவல நிலை யாருக்கும் வரக்கூடாது.

கிராமம் குறித்து வேதனை தெரிவிக்கும் மக்கள்

மக்களுக்கு நல்லது செய்கிறோம் என வாக்குக் கேட்டு மட்டும் இங்கு வருகிறார்கள். அதன் பின்னர் இங்கு எட்டிக்கூட பார்ப்பதில்லை. எங்களது குழந்தைகள் நிறைய படித்து சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால், எங்களது ஊரில் விளையாடுவதற்குக்கூட இடம் இல்லை. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியும் சாக்கடையுமாகதான் இருக்கிறது.

குடிநீருக்குக்கூட நான்கு கிலோமீட்டர் தள்ளிச் சென்றுதான் தண்ணீரை எடுத்து வருகிறாம். ஊருக்குள் ஒரு குடி தண்ணீர் பைப் கிடையாது. ஆண்கள் சுற்றி இருக்கும் ஊர்களில் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க செல்வதற்குக்கூட உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது. நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது என செய்திகளில் பார்க்கிறோம். ஆனால், எங்கள் ஊரில் ஒரு கழிவறை வசதிகூட கிடையாது.

இது குறித்து, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் எங்கேயாவது போகவேண்டியதுதான் வேறு வழி இல்லை என்கின்றனர்.

நமது நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறிவிட்டது எனக் கூறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு வேலை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் இந்த கிராம மக்கள் அல்லல்பட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 60 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது தச்சன்வயல் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் வசிக்கின்றனர். புதுக்கோட்டையின் அருகிலேயே இந்த ஊர் இருந்தாலும்கூட ‘சிட்டிசன்’ திரைப்படத்தில் வருவதுபோல் ‘அத்திப்பட்டி’ கிராமமாகத்தான் இருந்து வருகிறது.

ஏனென்றால், இந்த கிராமத்தில் குடி தண்ணீர் கிடையாது, சாலை கிடையாது, யாரேனும் இறந்து விட்டால் மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை கிடையாது. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் எங்கு செல்ல வேண்டுமானாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ஊரின் அருகே குண்டாறு செல்வதால் அந்த ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் தச்சன்வயல் எனும் கிராமத்தை சூழ்ந்துள்ளது.

தண்ணீரால் சூழ்ந்துள்ள தச்சன்வயல் கிராமம்

இதனால், மழை காலம் மட்டுமின்றி நிகழ் காலத்திலும் இதே நிலைமைதான் நிலவி வருகிறது. மேலும், அருகில் நெல் அவிக்கும் தொழிற்சாலை இருப்பதால் அதிலிருந்து வரும் கழிவுகள் இந்த ஊரின் அருகே உள்ள ஆற்றில் கலப்பதால் அந்த ஆற்றில் மக்கள் நடந்து செல்லும்போது உடல் நலக்குறைவு, கால்களில் சிரங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது;

நேற்று, இன்று மட்டும் இந்த பிரச்சனை நடைபெறுவதில்லை. காலங்காலமாக இப்படித்தான் நடந்துவருகிறது. ஆம்புலன்ஸ் வருவதற்குக்கூட இந்த ஊரில் வழி கிடையாது. இருசக்கர வாகனம் செல்வதற்குக்கூட சாலை கிடையாது. இந்த கிராமத்தை ஆற்றுநீர் சூழ்ந்து இருப்பதால் இடுப்பளவு தண்ணீரில் கடந்து செல்ல வேண்டும். ஒரு பாலம்கூட கிடையாது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எத்தனையோ முறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் ஊரைச் சுற்றி பொதுக் கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எதுவுமே கிடையாது. எதுவாக இருந்தாலும் 5 கிலோ மீட்டர் 10 கிலோமீட்டர் தூரம் தள்ளி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. யாரேனும் இறந்தால்கூட ஆற்றைக் கடந்து, குளத்தின் நடுவே கழுத்தளவு தண்ணீரில் உடலை கொண்டுபோய்தான் அடக்கம் செய்ய வேண்டும். இந்த அவல நிலை யாருக்கும் வரக்கூடாது.

கிராமம் குறித்து வேதனை தெரிவிக்கும் மக்கள்

மக்களுக்கு நல்லது செய்கிறோம் என வாக்குக் கேட்டு மட்டும் இங்கு வருகிறார்கள். அதன் பின்னர் இங்கு எட்டிக்கூட பார்ப்பதில்லை. எங்களது குழந்தைகள் நிறைய படித்து சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால், எங்களது ஊரில் விளையாடுவதற்குக்கூட இடம் இல்லை. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியும் சாக்கடையுமாகதான் இருக்கிறது.

குடிநீருக்குக்கூட நான்கு கிலோமீட்டர் தள்ளிச் சென்றுதான் தண்ணீரை எடுத்து வருகிறாம். ஊருக்குள் ஒரு குடி தண்ணீர் பைப் கிடையாது. ஆண்கள் சுற்றி இருக்கும் ஊர்களில் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க செல்வதற்குக்கூட உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது. நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது என செய்திகளில் பார்க்கிறோம். ஆனால், எங்கள் ஊரில் ஒரு கழிவறை வசதிகூட கிடையாது.

இது குறித்து, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் எங்கேயாவது போகவேண்டியதுதான் வேறு வழி இல்லை என்கின்றனர்.

நமது நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறிவிட்டது எனக் கூறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு வேலை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் இந்த கிராம மக்கள் அல்லல்பட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 60 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்!

Intro:Body:"அட நம்புங்க இதுவும் டிஜிட்டல் இந்தியாவில் தான்"- புதுகையில் ஓர் அத்திப்பட்டி...


புதுக்கோட்டை மாவட்டத்தின் மத்தியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தச்சன்வயல் கிராமம். இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் என 40 குடும்பங்கள் வசிக்கின்றன. மாவட்டத்தின் மையத்திலிருந்து சிறு தொலைவில் இந்த ஊர் இருந்தாலும்கூட திரைப்படத்தில் வருவதுபோல் அத்திப்பட்டி கிராமமாகத்தான் இருந்து வருகிறது. ஏனென்றால் இந்த கிராமத்தில் குடி தண்ணீர் கிடையாது ஊருக்கு செல்ல சாலை கிடையாது யாரேனும் இறந்து விட்டால் கூட மயான கரைக்கு எடுத்துச் செல்ல பாதை கிடையாது குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் எங்கு செல்ல வேண்டுமானாலும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ஊரின் அருகே குண்டாறு செல்வதால் அந்த ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் தச்சன்வயல் எனும் கிராமத்தை சூழ்ந்து உள்ளது இதனால் மழை காலம் மட்டுமின்றி நிகழ் காலத்திலும் இதே நிலைமைதான் நிலவி வருகிறது. மேலும் அருகில் நெல் அவிக்கும் தொழிற்சாலை இருப்பதால் அதிலிருந்து வரும் கழிவுகள் இந்த ஊரின் அருகே உள்ள ஆற்றில் கலப்பதால் அந்த ஆற்றில் மக்கள் நடந்து செல்லும்போது உடல் நலக்குறைவு கால்களில் சிரங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது,

நேற்று இன்று மட்டும் இந்த பிரச்சனை இல்லை காலகாலமாக இப்படித்தான் கிடக்கிறது ஒரு அசம்பாவிதம் நடந்தால் ஆம்புலன்ஸ் வருவதற்குக் கூட இந்த ஊரில் வழி கிடையாது இரண்டு சக்கர வாகனம் செல்வதற்குக் கூட சாலை கிடையாது ஆற்று தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் இடுப்பளவு தண்ணீரில் கடந்து செல்ல வேண்டும் ஒரு பாலம் கிடையாது எத்தனையோ முறை நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதுவரை எதுவும் செய்யவில்லை அதிகாரிகளை சந்தித்து பேசியபோதும் எந்தவித பயனும் இல்லை எங்கள் ஊரைச் சுற்றி அருகில் பொதுக் கட்டிடம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை பள்ளிக்கூடம் என எதுவுமே கிடையாது எதுவாக இருந்தாலும் 5 கிலோ மீட்டர் 10 கிலோமீட்டர் தள்ளி சென்றால் மட்டும் தான் இருக்கும் யாரேனும் இறந்தால் ஆற்றைக் கடந்து இருக்கும் குளத்தின் நடுவே கழுத்தளவு தண்ணீரில் கொண்டுபோய் அடக்கம் செய்ய வேண்டும் இந்த அவல நிலை யாருக்கும் வரக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்கிறோம் என ஓட்டு கேட்டு மட்டும் இங்கு வருகிறார்கள் .அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் எங்கேயாவது போக வேண்டியதுதான் வேறு வழி இல்லை. எங்களது குழந்தைகள் நிறைய படிக்க வேண்டும் நல்ல சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் விளையாட்டு போட்டிகளில் எல்லாம் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் எங்களது ஊரில் அருகில் விளையாடுவதற்கு கூட குழந்தைகளுக்கு இடம் இல்லை எங்கு பார்த்தாலும் சேறு சகதி சாக்கடை இது தான் இருக்கிறது. குடிநீருக்கு நான்கு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஓட்டு வரும் தண்ணீரை எடுத்து வர வேண்டும். ஊருக்குள் ஓர் குடி தண்ணீர் பைப் கூட கிடையாது. ஆண்கள் சுற்றி இருக்கும் ஊர்களில் கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர் வீட்டில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க செல்வதற்குக் கூட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது என செய்திகளில் பார்க்கிறோம் ஆனால் எங்க ஊரில் ஒரு கழிவறை வசதி கூட கிடையாது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.