ETV Bharat / state

மனு கொடுக்க வருபவர்களுக்காக மருத்துவ முகாம்! - District Collectorate Office

புதுக்கோட்டை: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகை புரியும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கிவைத்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்
author img

By

Published : Jun 4, 2019, 9:16 AM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகைபுரியும் முதியோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி இன்று தொடங்கிவைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் மருத்துவ உதவிகள் தேவைப்படும்.

முதியோர், பார்வை குறைபாடு உள்ளவர்கள் எவ்வித சிரமும் இல்லாமல் மாவட்ட ஆட்சியரகத்தில் உரிய மருத்துவ குழுவினர் கொண்டு பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம்

இந்த மருத்துவ முகாம் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், அவரது மருத்துவர் குழுவினர் தலைமையில் வாரம்தோறும் நடைபெற உள்ளது" என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகைபுரியும் முதியோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி இன்று தொடங்கிவைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் மருத்துவ உதவிகள் தேவைப்படும்.

முதியோர், பார்வை குறைபாடு உள்ளவர்கள் எவ்வித சிரமும் இல்லாமல் மாவட்ட ஆட்சியரகத்தில் உரிய மருத்துவ குழுவினர் கொண்டு பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம்

இந்த மருத்துவ முகாம் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், அவரது மருத்துவர் குழுவினர் தலைமையில் வாரம்தோறும் நடைபெற உள்ளது" என்றார்.

Intro:மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகை புரியும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார். மேலும் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி உத்தரவு..


Body:புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகை புரியும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இனை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் மருத்துவ உதவிகள் தேவைப்படும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எவ்வித சிரமும் இல்லாமல் மாவட்ட ஆட்சியரகத்தில் உரிய மருத்துவ குழுவினர் கொண்டு பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொடர் சிகிச்சைகள் வழங்க வேண்டி இருந்தால் அவர்களுக்கு என ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாம் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது மருத்துவர் குழுவினர் தலைமையில் வாரம்தோறும் நடைபெற உள்ளது. மேலும் மனு எழுதுவதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் திங்கட்கிழமை தோறும் அரசுத்துறை பணியாளர்களை கொண்டு மனுக்களை எழுதி வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.