ETV Bharat / state

இளம்பெண்ணை இரு நாட்களாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை! - girl was abducted for two days In Keelachery village

புதுக்கோட்டை: இளம்பெண்ணை கடத்திச் சென்று அடைத்து வைத்து அவருக்கு இரு நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இரு நாட்களாக கடத்தி வைத்து  இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
இரு நாட்களாக கடத்தி வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
author img

By

Published : Jan 28, 2020, 9:37 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் தனலட்சுமி (20). இவரைக் கடந்த 24ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

அதன் பிறகு சிலட்டூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்த இவர், தற்போது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமியின் வீட்டின் அருகே சுரேஷ் அடிக்கடி சென்றுவந்ததால், அவரின் மீது தனலட்சுமியின் சகோதரர் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுரேஷ் இல்லாதபோது அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

கீழச்சேரி கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

அப்போது தன் தங்கை தனலட்சுமி வாயில் துணி கட்டியபடி கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தங்கை தனலட்சுமியை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதையடுத்து சுரேஷ் மீது காவல் துறையினர் s363, 342, 376(ii)Ipc ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதுகுறித்து அவர்களது பெற்றோர்களிடம் காவல் துறையினர் கேட்டபோது, பதில் கூற மறுத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

90 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்!

புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் தனலட்சுமி (20). இவரைக் கடந்த 24ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

அதன் பிறகு சிலட்டூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்த இவர், தற்போது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமியின் வீட்டின் அருகே சுரேஷ் அடிக்கடி சென்றுவந்ததால், அவரின் மீது தனலட்சுமியின் சகோதரர் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுரேஷ் இல்லாதபோது அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

கீழச்சேரி கிராமத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

அப்போது தன் தங்கை தனலட்சுமி வாயில் துணி கட்டியபடி கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தங்கை தனலட்சுமியை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதையடுத்து சுரேஷ் மீது காவல் துறையினர் s363, 342, 376(ii)Ipc ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதுகுறித்து அவர்களது பெற்றோர்களிடம் காவல் துறையினர் கேட்டபோது, பதில் கூற மறுத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

90 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்!

Intro:இளம்பெண்ணை இரண்டு நாட்களாக தடுத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.Body: புதுக்கோட்டை மாவட்டம் கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகள் தனலட்சுமி(20). இவர் கடந்த 24ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடியுள்ளனர் இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது அதன் பிறகு பக்கத்து கிராமமான சிலட்டூர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து தற்போதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனலட்சுமி வீட்டு பக்கம் அடிக்கடி வந்து செல்வதால் அவரது சகோதரர் முருகனுக்கு சுரேஷின் மீது சந்தேகம் வர அவர் இல்லாத போது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார் அப்போது தன் தங்கையை அண்ணனுக்கு வாயில் துணி கட்டியபடி கிடந்துள்ளார் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன் தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனலட்சுமிக்கு தற்போது சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களாக கடத்தி வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சுரேஷ் காவல்துறையினர் s363 ,342,376(ii)Ipc ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் கேட்டபோது பதில் கூறு மறுத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.