ETV Bharat / state

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சடலமாக மீட்பு - நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்

author img

By

Published : Jan 23, 2021, 7:58 PM IST

புதுக்கோட்டை: இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதி உயிரிழந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களின் உடல்கள் இன்று (ஜன.23) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா (30), வி.நாகராஜ் (52), எஸ்.செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த என்.சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 மீனவர்கள் ஜன.18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மறுநாள் அதிகாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. பின்னர், இலங்கை கடற்படையினர் தேடி அடுத்தடுத்த நாட்களில் 4 மீனவர்களையும் சடலங்களாக மீட்டு யாழ்பாணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர்களது சடலங்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு கோட்டைப்பட்டினம் பகுதிக்கு அவர்களது உடல் இன்று கொண்டு வரப்பட்டது. அவர்களின் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்த மீனவர்களின் உடல்கள் இன்று புதுக்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும் குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரேனும் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம் கொடுப்பார்.

இதுபோன்ற துயரமான சம்பவங்கள் இனிமேல் தொடர கூடாது என்பதற்காக நடவடிக்கைகளை எடுக்குமாறு மீன்வளத் துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் இறந்தவர்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெல்லி போராட்டத்தில் கொலை முயற்சி? விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா (30), வி.நாகராஜ் (52), எஸ்.செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த என்.சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 மீனவர்கள் ஜன.18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மறுநாள் அதிகாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரின் படகுடன் மோதி மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. பின்னர், இலங்கை கடற்படையினர் தேடி அடுத்தடுத்த நாட்களில் 4 மீனவர்களையும் சடலங்களாக மீட்டு யாழ்பாணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர்களது சடலங்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு கோட்டைப்பட்டினம் பகுதிக்கு அவர்களது உடல் இன்று கொண்டு வரப்பட்டது. அவர்களின் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்த மீனவர்களின் உடல்கள் இன்று புதுக்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும் குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரேனும் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம் கொடுப்பார்.

இதுபோன்ற துயரமான சம்பவங்கள் இனிமேல் தொடர கூடாது என்பதற்காக நடவடிக்கைகளை எடுக்குமாறு மீன்வளத் துறை அமைச்சருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் இறந்தவர்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெல்லி போராட்டத்தில் கொலை முயற்சி? விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.