ETV Bharat / state

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்: முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்!

புதுக்கோட்டை: விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் தொடங்கிவைப்பார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

author img

By

Published : Feb 18, 2021, 6:25 AM IST

minister vijayabaskar
minister vijayabaskar

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று (பிப்.17) தொடங்கிவைத்தார்.

பின்னர் தொண்டர்கள் முன்பு பேசிய அவர், "குளந்திரான்பட்டு கிராமத்தில் ரூ.4.78 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருவாய்த்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும், 63 பயனாளிகளுக்கு ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளும், 100 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் தொடங்கிவைப்பார்" என்று தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டை விவசாயிகளின் கனவுத்திட்டமான காவிரி -வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 21ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா டைம்ல பெட்ரோல் விலை ஏறுறது சகஜமப்பா - அளந்துவிட்ட எல். முருகன்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று (பிப்.17) தொடங்கிவைத்தார்.

பின்னர் தொண்டர்கள் முன்பு பேசிய அவர், "குளந்திரான்பட்டு கிராமத்தில் ரூ.4.78 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருவாய்த்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும், 63 பயனாளிகளுக்கு ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளும், 100 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் தொடங்கிவைப்பார்" என்று தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டை விவசாயிகளின் கனவுத்திட்டமான காவிரி -வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 21ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா டைம்ல பெட்ரோல் விலை ஏறுறது சகஜமப்பா - அளந்துவிட்ட எல். முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.