ETV Bharat / state

காவலாளி வீட்டில் 40 சவரன் நகை; ரூ. 4 லட்சம் ரொக்கம் திருட்டு! - காவலாளி வீட்டில் 40 சவரன் நகை திருட்டு

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிபவர் வீட்டில் 40 சவரன் நகையை அடையாளாம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

திருட்டு நடைபெற்ற வீடு
திருட்டு நடைபெற்ற வீடு
author img

By

Published : Jan 28, 2020, 10:05 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வமணி (48).

ரங்கநாதனின் மனைவி வெளியூர் சென்றுள்ள நிலையில், ரங்கநாதனும் நேற்றிரவு பணிக்குச் சென்றிருந்தார். இதனை பயன்படுத்திக்கொண்ட திருட்டு கும்பல், ரங்கநாதன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த இரண்டு கிலோ வெள்ளி, 40 சவரன் நகைகள், நான்கு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

பின்பு, பணி முடிந்து வீடு திரும்பிய ரங்கநாதன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து அறந்தாங்கி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

திருட்டு நடைபெற்ற வீடு

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். பின்னர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவின் மூலம் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ. 10 லட்சம் பணம் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வமணி (48).

ரங்கநாதனின் மனைவி வெளியூர் சென்றுள்ள நிலையில், ரங்கநாதனும் நேற்றிரவு பணிக்குச் சென்றிருந்தார். இதனை பயன்படுத்திக்கொண்ட திருட்டு கும்பல், ரங்கநாதன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த இரண்டு கிலோ வெள்ளி, 40 சவரன் நகைகள், நான்கு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

பின்பு, பணி முடிந்து வீடு திரும்பிய ரங்கநாதன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து அறந்தாங்கி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

திருட்டு நடைபெற்ற வீடு

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். பின்னர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவின் மூலம் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ. 10 லட்சம் பணம் கொள்ளை

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பல லட்ச ரூபாய் மதிப்பு நகைகள் திருட்டு.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில்நகர் பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம்மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு.
எழில்நகர் பகுதியில் வசித்துவருபவர்
ரங்கநாதன்(57) என்பவர் இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி செல்வமணி(48) ரங்கநாதன் நேற்றிரவு பணிக்கு சென்றுள்ளார்
இவரது மனைவியும் வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2கிலோ வெள்ளி பொருட்கள்,
40பவுன்தங்கநகைகள்,
4 லட்சம்ரெக்கபணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

பணிமுடித்து வீடு திரும்பிய ரங்கநாதன் வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அறந்தாங்கி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர் இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.