ETV Bharat / state

புதுக்கோட்டையில் மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 24, 2019, 11:17 PM IST

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே விவசாய நிலத்தில் இருந்த நெல் விதைகளின் நிலையைப் பார்க்கச் சென்ற இளைஞர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

annavasal Youth killed by lightning

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள புதூர் தாழம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் முத்துகுமார்(20). இவர் நேற்று தனது அத்தை மகனுடன் வயலில் நடவுக்காக வைத்திருந்த நெல் விதைகளின் நிலையைக் காணச்சென்றுள்ளனர்.

அப்போது பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த பிரகாஷ் செய்வது அறியாமல் திகைத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டுற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவப் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

அதன் பின்னர் அங்கு கொண்டு செல்லப்பட்ட முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மின்னல் தாக்கி இளைஞர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மின்னல் பாய்ந்து கொத்துக் கொத்தாக மடிந்த மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள புதூர் தாழம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் முத்துகுமார்(20). இவர் நேற்று தனது அத்தை மகனுடன் வயலில் நடவுக்காக வைத்திருந்த நெல் விதைகளின் நிலையைக் காணச்சென்றுள்ளனர்.

அப்போது பலத்த இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த பிரகாஷ் செய்வது அறியாமல் திகைத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டுற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவப் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

அதன் பின்னர் அங்கு கொண்டு செல்லப்பட்ட முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மின்னல் தாக்கி இளைஞர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மின்னல் பாய்ந்து கொத்துக் கொத்தாக மடிந்த மக்கள்!

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வயலுக்கு சென்ற வாலிபர்
மீது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக பலியானார்.

அன்னவாசல் அருகேயுள்ள புதூர் தாழம்பட்டியை சேர்ந்தவர் அடைக்கலம் இவரது மகன் முத்துகுமார் (வயது-20) இவர் கடந்த வருடம் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்லோமோ படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அன்னவாசல் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து பெய்தது. அப்பொழுது பெய்த தொடர் மழையால் வயலில் நடவுக்காக வைத்திருந்த நெல் விதைகளின் நிலைமையை கண்டறிய வயலுக்கு முத்துக்குமாரும் அவரது அத்தை மகன் பிரகாஷ் ஆகிய இருவரும் செல்போன் விளக்கை பயன்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அப்பொழுது பலத்த இடியுடன் கூடிய மின்னல் முத்துகுமார் மீது தாக்கியுள்ளது. இதில் முத்துகுமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த பிரகாஷ் செய்வது அறியாமல் திகைத்து அலறி அடித்துக்கொண்டு வீட்டுற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். அதன் பின்னர் அங்கு கொண்டு செல்லப்பட்ட முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.