ETV Bharat / state

பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்லும் போது விபத்து - பாட்டி உயிரிழப்பு!

author img

By

Published : Nov 25, 2019, 11:33 AM IST

புதுக்கோட்டை: பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்கு செல்லும் போது விபத்து! பாட்டி உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் - காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலை தடுமாறிய அவரால், இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த ராஜாமணி தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல் துறையினர் ராஜாமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த அடைக்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இது குறித்து அன்னவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கோவில்பட்டியில் சித்தியை கட்டையால் அடித்து கொன்ற இளைஞர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் - காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலை தடுமாறிய அவரால், இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த ராஜாமணி தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல் துறையினர் ராஜாமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த அடைக்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இது குறித்து அன்னவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கோவில்பட்டியில் சித்தியை கட்டையால் அடித்து கொன்ற இளைஞர் கைது!

Intro:இருசக்கர வாகனம் ஓட்டி அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயம் பின்னால் அமர்ந்து இருந்த அவரது மனைவி பலிBody:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது-65) இவரது மனைவி ராஜாமணி (வயது-50) இருவரும் புதூரில் இருந்து குமரமலை அருகே உள்ள குறுக்கப்பட்டியில் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக மகள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களது இருசக்கர வாகனம் புல்வயல் காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது அடைக்கலத்திற்கு திடிரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் திடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த ராஜாமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் அடைக்கலம் பலத்த காயமடைந்தார்.

பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடைக்கலத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜாமணியின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.