ETV Bharat / state

1951 முதல் தேர்தலையே சந்திக்காத கிராமம்!

author img

By

Published : Dec 24, 2019, 12:25 PM IST

Updated : Dec 24, 2019, 1:07 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள வேளையில், ஒரு கிராமத்தில் மட்டும் 1951 முதல் இதுவரை உள்ளாட்சித் தேர்தலே நடைபெறவில்லையாம். இந்த கட்டுரையின் மூலம் அந்த கிராமத்திற்கு பயணிப்போம்...

'இங்கு தேர்தல் கிடையாது, போட்டி கிடையாது, பிரச்சாரம் கிடையாது'
'இங்கு தேர்தல் கிடையாது, போட்டி கிடையாது, பிரச்சாரம் கிடையாது'

புதுக்கோட்டையின் மத்தியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குருவிக்கொண்டான்பட்டி கிராமம். செட்டிநாட்டிற்கு பெயர் போன இந்த கிராமம் அமைதிக்கும் அன்பிற்கும் அடையாளமாக திகழ்கிறது. இங்கு 1951 முதல் இதுவரை உள்ளாட்சித் தேர்தலே நடைபெற்றது கிடையாதாம்.

எந்தவித போட்டியுமின்றி மக்களாக இணைந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் இம்முறை விசாலாட்சி என்ற பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவ்வூரில் உள்ள மூன்று சமுதாயத்தினரில் இரண்டு பேர் வீதம் ஆறு பேர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி கூறியதாவது, "நான் தலைவர் ஆகிறேன் என்று விருப்பம் தெரிவித்தேன். அதனால் போட்டியிட விரும்பியவர்கள் விட்டுக்கொடுத்து விட்டார்கள். இது தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. அதனால் எங்களது ஊரில் உள்ளாட்சி தேர்தல் என்பதே கிடையாது. நிச்சயம் என் கிராம மக்களுக்கு வேண்டியதை செய்வேன்." என்று தெரிவித்தார்.

'இங்கு தேர்தல் கிடையாது, போட்டி கிடையாது, பிரச்சாரம் கிடையாது' - ஒற்றுமை கிராமம்

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், தான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது என்ன தேவை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்றும், இங்கு அரசியலை வைத்து ஊழல் நடக்காது, இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இது போலதான் எங்கள் ஊரில் கடைபிடிக்கப்படும், இதுவரை நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

A village with no local election in pudukottai
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்

ஊரே ஒன்று கூடி ஊராட்சி மன்ற தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதால் இந்த ஊரில் போட்டி, பொறாமை, பிரச்சாரம், பிரச்னை என்பதற்கெல்லாம் இடம் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் அதிகாரம் செலுத்தாமல் தன் கடமையையே செய்கிறார். மேலும் மக்களின் குறைகளை தானே முன் நின்று கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண்கிறார். எப்போதும் நிலவி வரும் அமைதி, மக்களுக்கிடையேயான பிணைப்பு, வித்தியாசமான அரசியல் முறை, இந்த ஒட்டுமொத்த சூழ்நிலைக்கும் காரணம் இந்த கிராமத்து மக்களின் ஒற்றுமையே!

இதையும் படிங்க: பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் - அசோக் கெலாட்

புதுக்கோட்டையின் மத்தியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குருவிக்கொண்டான்பட்டி கிராமம். செட்டிநாட்டிற்கு பெயர் போன இந்த கிராமம் அமைதிக்கும் அன்பிற்கும் அடையாளமாக திகழ்கிறது. இங்கு 1951 முதல் இதுவரை உள்ளாட்சித் தேர்தலே நடைபெற்றது கிடையாதாம்.

எந்தவித போட்டியுமின்றி மக்களாக இணைந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் இம்முறை விசாலாட்சி என்ற பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவ்வூரில் உள்ள மூன்று சமுதாயத்தினரில் இரண்டு பேர் வீதம் ஆறு பேர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி கூறியதாவது, "நான் தலைவர் ஆகிறேன் என்று விருப்பம் தெரிவித்தேன். அதனால் போட்டியிட விரும்பியவர்கள் விட்டுக்கொடுத்து விட்டார்கள். இது தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. அதனால் எங்களது ஊரில் உள்ளாட்சி தேர்தல் என்பதே கிடையாது. நிச்சயம் என் கிராம மக்களுக்கு வேண்டியதை செய்வேன்." என்று தெரிவித்தார்.

'இங்கு தேர்தல் கிடையாது, போட்டி கிடையாது, பிரச்சாரம் கிடையாது' - ஒற்றுமை கிராமம்

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், தான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது என்ன தேவை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்றும், இங்கு அரசியலை வைத்து ஊழல் நடக்காது, இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இது போலதான் எங்கள் ஊரில் கடைபிடிக்கப்படும், இதுவரை நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

A village with no local election in pudukottai
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்

ஊரே ஒன்று கூடி ஊராட்சி மன்ற தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதால் இந்த ஊரில் போட்டி, பொறாமை, பிரச்சாரம், பிரச்னை என்பதற்கெல்லாம் இடம் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் அதிகாரம் செலுத்தாமல் தன் கடமையையே செய்கிறார். மேலும் மக்களின் குறைகளை தானே முன் நின்று கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண்கிறார். எப்போதும் நிலவி வரும் அமைதி, மக்களுக்கிடையேயான பிணைப்பு, வித்தியாசமான அரசியல் முறை, இந்த ஒட்டுமொத்த சூழ்நிலைக்கும் காரணம் இந்த கிராமத்து மக்களின் ஒற்றுமையே!

இதையும் படிங்க: பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் - அசோக் கெலாட்

Intro:"தேர்தல் கிடையாது, பிரச்சாரம் கிடையாது, போட்டி கிடையாது,ஊ.ம.தலைவரை நாங்களே தேர்ந்தெடுத்து விடுவோம்" - ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் கிராமம்.Body:தமிழகத்தில் 3 வருடங்களை கடந்தும் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர்களும் சின்னங்களும் அறிவிக்கப்பட்டு வாக்காளர்கள் போட்டியிட தயாராகி விட்டனர். பிரச்சாரமும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையின் மத்தியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது குருவிக்கொண்டான்பட்டி கிராமம். சிவகங்கை க்கும் புதுக்கோட்டை பகுதியில் இருப்பதால் செட்டிநாட்டிற்கு பெயர் போன அமைதியான ஊராகத் திகழ்கிறது.இந்த ஊரில் 1951 முதல் இதுவரை உள்ளாட்சித் தேர்தலே நடைபெற்றது கிடையாதாம். எந்தவித போட்டியுமின்றி மக்களாக இணைந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். அந்த வகையில் இம்முறை விசாலாட்சி என்ற பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதுமட்டுமின்றி அவ்வூரில் உள்ள மூன்று சமுதாயத்தினரில் இரண்டு பேர் வீதம் ஆறு பேர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி கூறியதாவது,

நான் தலைவர் ஆகிறேன் என்று விருப்பம் தெரிவித்தேன் அதனால் போட்டியிட விரும்பியவர்கள் விட்டுக்கொடுத்து விட்டார்கள் இது தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது அதனால் எங்களது ஊரில் உள்ளாட்சி தேர்தல் என்பதே கிடையாது. என்னை நம்பி தேர்வு செய்யவிருப்பதால் நிச்சயம் நான் என் கிராம மக்களுக்கு வேண்டியதை செய்வேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது,

நான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பொழுது இந்த ஊர் மக்கள் தான் என்னை தேர்வு செய்தார்கள் என்ன தேவை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்வார்கள் அதனால் அரசியலில் ஊழல் ஏமாற்றுவது என்பது இந்த ஊரில் கிடையாது எதுவாயினும் மக்கள் முன்பு தான் நடக்கும் அரசியல் கட்சிகள் இன்றி ஒருவரை நாங்கள் தேர்வு செய்து வருகிறோம்.இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இது போலதான் இந்த ஊரில் இருக்கும் மூன்று சமுதாயத்தினர் இருக்கிறோம் மற்ற கட்சியில் இருப்பவர்களும் இருக்கிறார்கள் ஆனால் ஊராட்சி தேர்தல் வரும்பொழுது வசதி, ஜாதி இதையெல்லாம் பார்க்காமல் விருப்பம் தெரிவிப்பவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்போம். இதுவரை நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்த கிராம மக்களும் தெரிவித்ததாவது,

மற்ற ஊர்களில் நடப்பதுபோல போட்டியிட்டு அரசியல் பிரச்சினைகளை நடத்தி தேர்தல் நடத்தி என்ன செய்யப் போகிறோம். இந்த தேர்தல் கிராம மக்களுக்கு நன்மை செய்வதற்காக தானே!
அதனால் ஊரில் உள்ள ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து தலைவராகவும் உறுப்பினராகவும் அறிவித்து தேர்தல் வேண்டாம் என்று கூறி விடுவோம். இதனால் பிரச்சாரம் போட்டி பொறாமை பிரச்சனை என எதுவுமே கிடையாது. நாங்கள் தேர்வு செய்யும் தலைவர் மக்களுக்கு என்ன தேவையோ அதனை உடனடியாக செய்து விடுவார் மேலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாகவும் இருப்போம் இதற்குமேல் நிம்மதியாக வாழ ஒரு ஊருக்கு என்ன தேவை! என்று மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.Conclusion:
Last Updated : Dec 24, 2019, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.