ETV Bharat / state

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் குபேர யாக வேள்வி! - Perambalur

பெரம்பலூர்: செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் குபேர யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குபேரனை வழிபட்டனர்.

யாக வேள்வி
author img

By

Published : Jul 21, 2019, 3:58 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திப்பெற்ற அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

மேலும் 12 ராசிகளுக்கு 12 குபேர பெருமான் 12 தூண்களில் இருப்பது தனிச்சிறப்பு. இத்திருத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் குபேர பெருமான் இழந்த செல்வங்களை மீட்ட தினமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர யாகம் நடைபெறும்.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் குபேர யாக வேள்வி

இதனையொட்டி, கணபதி பூஜையுடன் யாக வேள்வி தொடங்கியது. பின்பு, 96 வகை மூலிகைப் பொருட்கள் யாக வேள்விகள் செலுத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

குபேர யாக வேள்வியில் கலந்துகொண்டால் கடன் பிரச்னைகள் தீரும், இழந்த செல்வங்களை மீட்க நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திப்பெற்ற அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

மேலும் 12 ராசிகளுக்கு 12 குபேர பெருமான் 12 தூண்களில் இருப்பது தனிச்சிறப்பு. இத்திருத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் குபேர பெருமான் இழந்த செல்வங்களை மீட்ட தினமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர யாகம் நடைபெறும்.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் குபேர யாக வேள்வி

இதனையொட்டி, கணபதி பூஜையுடன் யாக வேள்வி தொடங்கியது. பின்பு, 96 வகை மூலிகைப் பொருட்கள் யாக வேள்விகள் செலுத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

குபேர யாக வேள்வியில் கலந்துகொண்டால் கடன் பிரச்னைகள் தீரும், இழந்த செல்வங்களை மீட்க நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Intro:செட்டிகுளம் குபேர யாக வேள்வியில் குவிந்த பக்தர்கள்


Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் இத்திருக்கோவிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார் மேலும் 12 ராசிகளுக்கு 12 குபேர பெருமான் 12 தூண்களில் இருப்பது தனிச்சிறப்பாகும் இதனிடையே குபேர பெருமான் இழந்த செல்வங்களை மீட்ட தினமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர யாகம் நடைபெறும் கணபதி பூஜையுடன் தொடங்கியது 96 வகை மூலிகை பொருட்கள் யாக வேள்விகள் செலுத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் திரவியம் தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது


Conclusion:இந்த குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதன் மூலம் கடன் பிரச்சினைகள் தீரவும் இழந்த செல்வங்களை மீட்க நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.