பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், பாலத்தின் அடியில், துறையூர் சாலை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் பலர் தங்க வீடின்றி வாழ்ந்து வருகின்றனர்.
மழை, குளிர் காலங்களில் இவர்களின் பாடு திண்டாட்டம்தான். உடுத்த போதிய ஆடையில்லாத இவர்களுக்கு குளிரைத் தாங்கும் நல்ல போர்வைகள் கூட இல்லை. குளிரில் நடுங்கியபடியே இவர்களின் இரவுகள் விடியும். இதைக் கண்டு வேதனையுற்ற பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தினர் அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.
![Perambalur youths give blankets](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9507037_tyyy.jpg)
நேற்றிரவு குளிரில் தவித்துக் கொண்டிருந்த ஆதரவற்றோருக்கு இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சத்யா, இளைஞர் குழுவைச் சேர்ந்த பிரதீப், சரத், பாஸ்கர் ஆகியோர் போர்வைகளை வழங்கி உதவினர்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிய வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்!