ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு எடுத்த பெரம்பலூர் ஆட்சியர்!

author img

By

Published : May 4, 2023, 10:02 AM IST

பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்காக நடைபெற்று வரும் சிறப்பு பயிற்சி வகுப்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

போட்டித் தேர்வு வகுப்பு நடத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
போட்டித் தேர்வு வகுப்பு நடத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு எடுத்த பெரம்பலூர் ஆட்சியர்!

பெரம்பலூர்: அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவடைந்ததும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கப்பட்டு, இன்றுடன் (மே 4) நிறைவு பெறுகிறது.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்ப நிதியில் இருந்து 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டித் தேர்விற்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் காலை - மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எந்த வித அச்சமும், தயக்கமும், பதட்டமும் இல்லாமல் எழுதும் வகையில், ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வகுப்பில் தேர்வுக்கான பதில் மற்றும் அது தொடர்பாக மேலும் எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், நேற்று (மே 3) விலங்கியல் தொடர்பாக நடைபெற்ற மாலை நேர பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் நடத்தினார். அப்போது மாணவர்களுக்கு விலங்கியல் தொடர்பான சந்தேகங்களுக்கு சுலபமாக புரியும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாடம் நடத்தினார். இது புதிய ஊக்கத்தை அளித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Pudukkottai collector: ஓய்வு பெறும் நாளில் டபேதாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுக்கோட்டை ஆட்சியர்!

பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு எடுத்த பெரம்பலூர் ஆட்சியர்!

பெரம்பலூர்: அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவடைந்ததும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கப்பட்டு, இன்றுடன் (மே 4) நிறைவு பெறுகிறது.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்ப நிதியில் இருந்து 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டித் தேர்விற்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் காலை - மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எந்த வித அச்சமும், தயக்கமும், பதட்டமும் இல்லாமல் எழுதும் வகையில், ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வகுப்பில் தேர்வுக்கான பதில் மற்றும் அது தொடர்பாக மேலும் எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், நேற்று (மே 3) விலங்கியல் தொடர்பாக நடைபெற்ற மாலை நேர பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் நடத்தினார். அப்போது மாணவர்களுக்கு விலங்கியல் தொடர்பான சந்தேகங்களுக்கு சுலபமாக புரியும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாடம் நடத்தினார். இது புதிய ஊக்கத்தை அளித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Pudukkottai collector: ஓய்வு பெறும் நாளில் டபேதாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுக்கோட்டை ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.