ETV Bharat / state

திமுக முன்னாள் எம்எல்ஏவால் கொலை செய்யப்பட்ட சிறுமி - நிவாரணம் கோரி பெற்றோர் மனு

பெரம்பலூர்: திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர், நிவாரணம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

author img

By

Published : Jul 23, 2019, 9:18 PM IST

பெற்றோர் மனு

2006 முதல் 2011 வரை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் எம் ராஜ்குமார். இவரது வீட்டில் பணியாற்ற கேரளாவைச் சேர்ந்த சந்திரன்-சுசிலா தம்பதியின் மகள் சத்யா(15) வரவழைக்கப்பட்டார்.

இந்நிலையில் சத்யாவின் உடல்நிலை மோசமானதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் சிறுமியின் பெற்றோரிடம் ராஜ்குமார் தகவல் தெரிவித்தார். அதன்பின், 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வெளியான உடற்கூறாய்வு அறிக்கையில், சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், அவரது நண்பர்கள் 6 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் போலீசில் சரணடைந்தார், மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெற்றோர் மனு

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜயசாந்தி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மற்றொரு குற்றவாளியான ஜெய்சங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாயையும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கபடாததால், அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தன் மகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி, சத்யாவின் பெற்றோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

2006 முதல் 2011 வரை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் எம் ராஜ்குமார். இவரது வீட்டில் பணியாற்ற கேரளாவைச் சேர்ந்த சந்திரன்-சுசிலா தம்பதியின் மகள் சத்யா(15) வரவழைக்கப்பட்டார்.

இந்நிலையில் சத்யாவின் உடல்நிலை மோசமானதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் சிறுமியின் பெற்றோரிடம் ராஜ்குமார் தகவல் தெரிவித்தார். அதன்பின், 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வெளியான உடற்கூறாய்வு அறிக்கையில், சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், அவரது நண்பர்கள் 6 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் போலீசில் சரணடைந்தார், மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெற்றோர் மனு

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜயசாந்தி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மற்றொரு குற்றவாளியான ஜெய்சங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாயையும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கபடாததால், அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தன் மகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி, சத்யாவின் பெற்றோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Intro:பெரம்பலூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர பெரம்பலூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் சத்யாவின் பெற்றோர் நிவாரணம் வழங்க வேண்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு


Body:பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் 2006 2011 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எம் ராஜ்குமார் இவரது வீட்டில் கேரளாவைச் சேர்ந்த சந்திரன் சுசிலா தம்பதியின் மகள் சத்யா வயது 15 வீட்டு வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்டார் இந்நிலையில் சத்யாவின் உடல்நிலை மோசமானதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதித்து விட்டதாகவும் சிறுமியின் பெற்றோரிடம் சட்டமன்ற உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார் சிகிச்சை பலனின்றி 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாதம் சிறுமி சக்தியை இழந்துவிட்டால் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இழந்து போனதைத் தொடர்ந்து சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது அடைத்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் அவர் நண்பர்கள் ஜெய்சங்கர் அன்பரசு மகேந்திரன் ஜெயக்குமார் அரிகிருஷ்ணன் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஆள் கடத்தல் கற்பழிப்பு கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இதனை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் போலீசில் சரணடைந்தார் மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர் பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இந்த வழக்கில் பெரம்பலூர் கோர்ட்டில் நடந்து வந்தது விசாரணையின் போது ராஜ்குமார் நண்பர்களில் ஒருவரான பன்னீர் செல்வம் இறந்து போனார் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்எல்ஏ என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜயசாந்தி குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ ராஜ்குமாருக்கு கற்பழித்தல் மரணம் நிகழும் எனத் தெரிந்தே குற்றம் செய்தல் கூட்டுசதி ஆகிய பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு இன்னொரு குற்றவாளியான ஜெய்சங்கருக்கு கூட்டுச்சதி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாயையும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இறந்த தன் தன் மகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி ஆளுநர் ஆன்லைன் மூலம் பதிவுசெய்யப்பட்ட அதனால் மனு நிராகரிக்கப்பட்டது இதனிடையே முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட தன் மகள் நிவாரணம் வழங்க வேண்டி இளம் பெண் சத்யாவின் பெற்றோர் சுசீலா சந்திரன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் மனு அளித்தனர்


Conclusion:தங்கள் மகள் இறந்து போனதற்கு நிவாரணம் வழங்காமல் இழுத்தடிப்ப வேதனை கொள்ளாது உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் பேட்டி ரமேஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.