பெரம்பலூர் மாவட்டம் நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், தீபா தம்பதி. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கடேசன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது மனைவி தீபா, இரண்டு குழந்தைகள் ஆகியோர் நெற்குணத்தில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு (மார்ச்9) இவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவில் இருந்த 52 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இன்று (மார்ச் 10) காலை எழுந்த தீபாவிற்கு திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டின் கதவுகளை உடைத்து 16 சவரன் நகை திருட்டு