பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசின் சிறுதொழில் மானியத்தோடு பாக்கு மட்டை தட்டுகள் செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள தம்பிரான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் பாக்கு மட்டையில் உருவான சாப்பாடு தட்டுகள் தயாரிப்பு செய்வதில் தீவிரம் காட்டிவருகின்றார். சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுவரும் தட்டுகளின் மதிப்பு இரண்டு முதல் 10 வரை ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது.
இந்தத் தட்டுகள் எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு தயார் செய்யப்படுவதால், பொதுமக்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இருந்தும் - பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பாக்கு மட்டை தட்டுகளை வாங்கிச் செல்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பொதுமக்களுக்கும் மண்ணிற்கும் மாசில்லாத இந்த இயற்கை பாக்கு மட்டைகளை பயன்படுத்திய பின்னரும் மண்ணில் புதைத்தால் அது மக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
இதனால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிகிறது. மேலும் தமிழ்நாடு அரசு நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் பாக்கு மட்டைகள் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும் என அவர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.