ETV Bharat / state

திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி - பழனிசாமி பரப்புரை

author img

By

Published : Apr 10, 2019, 5:03 PM IST

பெரம்பலூர்: திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத, கொள்கை இல்லாத கூட்டணி என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

admk election campaign

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவபதியை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

"மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கான தேர்தல்தான் இந்த நாடாளுமன்றத்தேர்தல். திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான தேர்தல் அறிக்கை. பொய்யைச் சொல்லி வாக்குகளை பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை. கடந்த தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறியது என்ன ஆயிற்று. அதிமுக தேர்தல் அறிக்கை உண்மையானது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மாணவர்களுக்கு மடிகணினி, திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கொள்கை இல்லாத கூட்டணி எப்படி ஒரு நிலையான ஆட்சியை தர முடியும். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம். பாலியல் குற்றச்சாட்டுக்கு மூல காரணமே திமுகதான். பாலியல் குற்றச்சாட்டில் பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் பெரம்பலூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர். ஒரு ஆண்மகனாக ஸ்டாலின் இதற்கு பதில் கூற வேண்டும். அதிமுக அரசில் பெரம்பலூரில் புதிய மருத்துவமனை கட்டடம், சின்ன மொட்டுலு அணை, கல்லூரி சாலைகள், ஏரி, குளம் உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட்டு உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அதிமுக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவபதியை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

"மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கான தேர்தல்தான் இந்த நாடாளுமன்றத்தேர்தல். திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான தேர்தல் அறிக்கை. பொய்யைச் சொல்லி வாக்குகளை பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை. கடந்த தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறியது என்ன ஆயிற்று. அதிமுக தேர்தல் அறிக்கை உண்மையானது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மாணவர்களுக்கு மடிகணினி, திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கொள்கை இல்லாத கூட்டணி எப்படி ஒரு நிலையான ஆட்சியை தர முடியும். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம். பாலியல் குற்றச்சாட்டுக்கு மூல காரணமே திமுகதான். பாலியல் குற்றச்சாட்டில் பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் பெரம்பலூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர். ஒரு ஆண்மகனாக ஸ்டாலின் இதற்கு பதில் கூற வேண்டும். அதிமுக அரசில் பெரம்பலூரில் புதிய மருத்துவமனை கட்டடம், சின்ன மொட்டுலு அணை, கல்லூரி சாலைகள், ஏரி, குளம் உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட்டு உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அதிமுக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Intro:திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரம்பலூரில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேச்சு


Body:தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதனிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிவபதி போட்டியிடுகிறார் அதிமுக வேட்பாளர் சிவபதி ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரம்பலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வானொலி திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சிவபதி அவர்களுக்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதாவது திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என தெரிவித்தார் மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கான தேர்தல் இந்த தேர்தல் கூறினார் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிட்டது திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிட்டது ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான தேர்தல் அறிக்கை என சாடினார் பொய்யை சொல்லி வாக்குகளை பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை திமுகவின் தேர்தல் அறிக்கை எனவும் கூறினார் கடந்த கடந்த தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறியது என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பினார் அதிமுக தேர்தல் அறிக்கை உண்மையானது எனவும் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் குழந்தைகளுக்கு மடிகணினி திருமண உதவித்தொகை தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன எதுவுமே நிறைவேற்றப்படாத தேர்தல் அறிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கை எனவும் தெரிவித்தார் மேலும் திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் தெரிவித்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது இதற்கு உதாரணமாக என தெரிவித்தார் ஒரு கட்சியை வைத்துக்கொண்டு மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சந்தர்ப்பவாத கூட்டணி எனத் தெரிவித்தார் மேலும் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி எப்படி ஒரு நிலையான ஆட்சி தர முடியும் என தெரிவித்தார் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம் என குற்றஞ்சாட்டினார் பாலியல் குற்றச்சாட்டுக்கு மூல காரணமே திராவிட முன்னேற்றக் கழகமே எனவும் பாலியல் குற்றச்சாட்டில் பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றது பெரம்பலூரில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எனவும் பாலியல் குற்றச்சாட்டில் காரணமாக அமைவது திமுகவே எனவும் ஒரு ஆண்மகனாக ஸ்டாலின் இதற்கு பதில் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார் மேலும் அதிமுக அரசில் பெரம்பலூரில் புதிய மருத்துவமனை கட்டிடம் சின்ன மொட்டுலு அணை கல்லூரி சாலைகள் ஏரி குளம் உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட்டு உள்ளதா எனவும் பல்வேறு நலத்திட்டங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அதிமுக அரசு சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்


Conclusion:இந்த தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர் டி ராமச்சந்திரன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.