பெரம்பலூர் மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆகஸ்டு 24ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தை போல, திமுக நேற்று பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது.
பாரதிய ஜனதா கட்சியின் வேலையை திமுக பின்பற்றுகிறது. அதேபோல் கொள்கையையும் சித்தாந்தத்தையும் திமுக பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வருவோம், ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று மாயையை உருவாக்கி ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். திமுக எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மதுரை மண்டல கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்