ETV Bharat / state

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய மக்கள் கோரிக்கை!

author img

By

Published : Nov 9, 2019, 10:50 PM IST

பெரம்பலூர்: துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை நகராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

cauvery water leakage

பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக் குழாயை சரிசெய்வதற்கு நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். மேலும்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

எனவே, உடனடியாக நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்பது பெரம்பலூர் பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

இதையும் படிங்க: ’சமரச முயற்சியின் அடிப்படையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ - திருமாவளவன்

பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக் குழாயை சரிசெய்வதற்கு நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். மேலும்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

எனவே, உடனடியாக நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்பது பெரம்பலூர் பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

இதையும் படிங்க: ’சமரச முயற்சியின் அடிப்படையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ - திருமாவளவன்

Intro:வீணாகும் கொள்ளிடம் குடிநீர் கண்டுகொள்ளாத நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


Body:பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 20 க்கும் மேற்பட்ட வார்டு பகுதிகள் உள்ளன நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது இந்நிலையில் பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் கொள்ளிடம் குடிநீர் தொடர்ந்து வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறது கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வீணாகி வருகிறது நகராட்சி நிர்வாகம் இதுவரை கண்டுகொள்ளப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவியது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது ஆனால் தற்போது மக்களுக்கு பயன்படும் குடிநீர் வீணாகி வருகிறது


Conclusion:உடனடியாக நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து பைபிளை சரிசெய்து வீணாகும் குடிநீர் சரி செய்து கொடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.