ETV Bharat / state

'கராத்தே கிட்' இலக்கியாவுக்கு ரூ.3 லட்சம்; பாரிவேந்தர் அறிவிப்பு!

பெரம்பலூர்: சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு தங்கம் வென்ற இலக்கியாவுக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை ஐ.ஜே.கே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

கராத்தே
author img

By

Published : May 13, 2019, 7:59 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - கீதா தம்பதின் மகள் இலக்கியா. ஏழாம் வகுப்பு படிக்கும் இவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பரிசுத்தொகையும், பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில், நேற்றைய தினம் கிராம பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் நடத்தி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் சார்பில் ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரிவேந்தர் கூறுகையில், "சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இலக்கியா, தனது விடா முயற்சியால் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். கராத்தே போட்டி இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள இலக்கியாவை பாராட்டுகின்ற வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் சார்பில் ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்குகிறோம். எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்கவும் அவருக்கு உதவிகள் செய்து தரப்படும்" என்றார்.

இலக்கியாவின் தங்கப்பதக்கம் மற்றும் அவரது கோரிக்கை குறித்து ஈடிவி பாரத்தில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பதால், செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத்திற்கும், பரிசுத்தொகை அறிவித்த ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தருக்கும் நன்றி தெரிவித்தார் இலக்கியா.

இலக்கியாவின் பிரத்தியேக பேட்டி

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் - கீதா தம்பதின் மகள் இலக்கியா. ஏழாம் வகுப்பு படிக்கும் இவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பரிசுத்தொகையும், பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில், நேற்றைய தினம் கிராம பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் நடத்தி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் சார்பில் ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரிவேந்தர் கூறுகையில், "சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இலக்கியா, தனது விடா முயற்சியால் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். கராத்தே போட்டி இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள இலக்கியாவை பாராட்டுகின்ற வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் சார்பில் ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை வழங்குகிறோம். எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்கவும் அவருக்கு உதவிகள் செய்து தரப்படும்" என்றார்.

இலக்கியாவின் தங்கப்பதக்கம் மற்றும் அவரது கோரிக்கை குறித்து ஈடிவி பாரத்தில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பதால், செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத்திற்கும், பரிசுத்தொகை அறிவித்த ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தருக்கும் நன்றி தெரிவித்தார் இலக்கியா.

இலக்கியாவின் பிரத்தியேக பேட்டி
Intro:மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கம் வென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா விற்கு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் சார்பில் ரூபாய் 3 லட்சம் பரிசுத் தொகை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு


Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் கீதா தம்பதியினரின் ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் இலக்கியா மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு பிரிவுகளில் தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் இதனிடையே தங்கம் என்ற இலக்கியத்திற்கு நேற்று கிராம பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா விற்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் சார்பில் ரூபாய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார் மேலும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமைக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இலக்கிய அவர்கள் தனது விடா முயற்சியின் மூலம் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் கராத்தே போட்டிகள் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று உள்ள செல்வியில் இலக்கியாவை பாராட்டுகின்ற வகையில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் சார்பில் ரூபாய் 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் அறிவித்துள்ளார் மேலும் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்கவும் அவருக்கான உதவிகள் செய்து தரப்படும் எனவும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார் இதனிடையே தங்கப்பதக்கம் என்ற செல்வி இலக்கியாவின் தந்தை சென்னையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து தன் மகள் தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


Conclusion:மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற செல்வி இலக்கியா விற்கு எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது நேற்று இதுகுறித்து etv bharat செய்தி வெளியிட்டு அதன் எதிரொலியாக நிதி உதவி வழங்கப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.