ETV Bharat / state

மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர்: கல்வித் துறை அதிரடி நடவடிக்கை! - Namakkal District News

நாமக்கல்: ராசிபுரம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பள்ளி கல்வித் துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவிகள்
author img

By

Published : Nov 9, 2019, 9:23 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் கொங்களம்மன் கோயில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர் பாடம் எடுக்கும் எட்டாம் வகுப்பில் 8 மாணவிகளும், ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் 8ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபசமாகப் பேசுவதாக பெற்றோர் மாவட்ட கல்வித் துறை அலுவலரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலர் மாணவிகளிடம் விசாரித்தபோது, ஆசிரியர் சுரேஷ் நிர்வாண சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து கூறிவந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாணவியாக அழைத்து உடல் உறுப்புகள் குறித்து கொச்சையாகவும் பேசியுள்ளார்.

மாணவிகள் பேட்டி

மேலும், மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் கொங்களம்மன் கோயில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர் பாடம் எடுக்கும் எட்டாம் வகுப்பில் 8 மாணவிகளும், ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் 8ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபசமாகப் பேசுவதாக பெற்றோர் மாவட்ட கல்வித் துறை அலுவலரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலர் மாணவிகளிடம் விசாரித்தபோது, ஆசிரியர் சுரேஷ் நிர்வாண சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து கூறிவந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாணவியாக அழைத்து உடல் உறுப்புகள் குறித்து கொச்சையாகவும் பேசியுள்ளார்.

மாணவிகள் பேட்டி

மேலும், மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

Intro:இராசிபுரம் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பள்ளி கல்வி துறை அதிரடிBody:இராசிபுரம் அடுத்த கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர் சுரேஷ், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிசத்தில் ஈடுபட்ட விவகாரம்.
ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் நடவடிக்கை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ், 37, இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். எட்டாம் வகுப்பில் 8 மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகிறார். இப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள்தான் இப்பள்ளியில் அதிகம் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 8 ம் வகுப்பு மாணவிகளிடம் ஆபசமாக பேசுவதாக பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்து மாணவிகளிடம் கேட்டபோது நிர்வான சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து  கூறிவந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாணவியாக அழைத்து உடல் உறுப்புகளின் பாகங்களை கூறி வீட்டில் சென்று அளந்து குறித்து வரவேண்டும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி விடுமுறையில் மாணவிகள் சென்றாலும் ஜாதிபெயரை சொல்லி யாருடன் சென்றாய் என்றும் கேட்டுள்ளார். மேலும் மாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. மாணவிகள் 8 பேரும், அவர் செய்த பாலியல் தொந்தரவுகளை கடிதமாக எழுதி வட்டார கல்வி அலுவரிடம் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.