ETV Bharat / state

விபத்து மீட்பு பணியின்போது விபத்தில் சிக்கிய உதவி ஆய்வாளர் பலி

author img

By

Published : Oct 3, 2020, 12:44 AM IST

விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் விபத்தில் சிக்கி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

police_death
police_death

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களை, புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆம்புலன்ஸின் மீது மற்றொரு லாரி மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், செல்வராஜ், பார்த்திபன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் நேற்று (அக். 02) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் அவருடைய சொந்த ஊரான புதுப்பாளையம் மயானத்தில், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. விபத்து மீட்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தது காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : எஸ்பிபியின் நினைவிடம் - சனி, ஞாயிறு பார்வையிட அனுமதியில்லை!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களை, புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆம்புலன்ஸின் மீது மற்றொரு லாரி மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், செல்வராஜ், பார்த்திபன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் நேற்று (அக். 02) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் அவருடைய சொந்த ஊரான புதுப்பாளையம் மயானத்தில், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. விபத்து மீட்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தது காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : எஸ்பிபியின் நினைவிடம் - சனி, ஞாயிறு பார்வையிட அனுமதியில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.