ETV Bharat / state

ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி: பயிர்களின் நோய் தாக்குதல் குறித்து உடனடி நடவடிக்கை!

நாமக்கல்: ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலியின் விளைவாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல் நடந்த விவசாய நிலங்களை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

author img

By

Published : Nov 10, 2019, 4:39 PM IST

Updated : Nov 10, 2019, 6:16 PM IST

etv impact on farmers issue

நாமக்கல் மாவட்டத்தில் சில விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் நோய் தாக்குதலின் காரணமாக அழிந்து போவதாக வந்த புகாரை நமது செய்தியாளர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணைய ஊடகத்தில் காட்சிப்படுத்தினர். இது வேளாண் அலுவலர்கள் கவனத்திற்குச் சென்றதையடுத்து, உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் குள்ளப்பநாயக்கன்பட்டி, கதிராநல்லூர், பாச்சல், கடந்தபட்டி, மொஞ்சனூர், வளையப்பட்டி, வெண்ணந்தூர், கல்லுபாளையம், பட்டணம், கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம், அழுகல் மற்றும் பூஞ்சான நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 30 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டது.

etv impact on farmers issue  சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல்
நோய் தாக்குதலை தடுக்க அறிவுரை வழங்கிய ஆராய்ச்சியாளர்கள்

இதுகுறித்து பிரத்யேக செய்தி நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாட்டில் ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ், இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து உயர் அலுவலர்களை வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேளாண்மைத் துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அனுப்பினார்.

கழுதை பாலில் அழகு சாதனப் பொருட்கள்: அசத்தும் கேரள பொறியாளர்!

இதனையடுத்து சென்னை தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் கண்ணன், வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சண்முகம், வித்யா, தெய்வமணி, மக்களவை உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் இன்று வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

etv impact on farmers issue  சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல்
நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள்

அப்போது பயிர் சாகுபடி முறைகள், நோய் தாக்குதல், பாதிப்புகள், நோய்களுக்குத் தெளிக்கப்பட்ட மருந்துகள், நீர் பாசன முறைகள் குறித்துக் கேட்டறிந்தும் நோய் தாக்கிய பயிர்களை ஆய்வு செய்து ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றனர். மேலும் நோய் தாக்குதலிலிருந்து வெங்காயத்தைக் காப்பது குறித்து ஆலோசனைகளையும் பாதிப்பு ஏற்பட்ட பயிர்களுக்குத் தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

பயிர்களின் நோய் தாக்குதல் குறித்து உடனடி நடவடிக்கை - ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி

நாமக்கல் மாவட்டத்தில் சில விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் நோய் தாக்குதலின் காரணமாக அழிந்து போவதாக வந்த புகாரை நமது செய்தியாளர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணைய ஊடகத்தில் காட்சிப்படுத்தினர். இது வேளாண் அலுவலர்கள் கவனத்திற்குச் சென்றதையடுத்து, உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் குள்ளப்பநாயக்கன்பட்டி, கதிராநல்லூர், பாச்சல், கடந்தபட்டி, மொஞ்சனூர், வளையப்பட்டி, வெண்ணந்தூர், கல்லுபாளையம், பட்டணம், கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம், அழுகல் மற்றும் பூஞ்சான நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 30 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டது.

etv impact on farmers issue  சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல்
நோய் தாக்குதலை தடுக்க அறிவுரை வழங்கிய ஆராய்ச்சியாளர்கள்

இதுகுறித்து பிரத்யேக செய்தி நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாட்டில் ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ், இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து உயர் அலுவலர்களை வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேளாண்மைத் துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் அனுப்பினார்.

கழுதை பாலில் அழகு சாதனப் பொருட்கள்: அசத்தும் கேரள பொறியாளர்!

இதனையடுத்து சென்னை தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் கண்ணன், வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சண்முகம், வித்யா, தெய்வமணி, மக்களவை உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் இன்று வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

etv impact on farmers issue  சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல்
நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள்

அப்போது பயிர் சாகுபடி முறைகள், நோய் தாக்குதல், பாதிப்புகள், நோய்களுக்குத் தெளிக்கப்பட்ட மருந்துகள், நீர் பாசன முறைகள் குறித்துக் கேட்டறிந்தும் நோய் தாக்கிய பயிர்களை ஆய்வு செய்து ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றனர். மேலும் நோய் தாக்குதலிலிருந்து வெங்காயத்தைக் காப்பது குறித்து ஆலோசனைகளையும் பாதிப்பு ஏற்பட்ட பயிர்களுக்குத் தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

பயிர்களின் நோய் தாக்குதல் குறித்து உடனடி நடவடிக்கை - ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி
Intro:ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல் பகுதிகளை வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு, நோய் குறித்து ஆராய்ச்சி செய்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக விஞ்ஞானிகள் உறுதிBody:ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதல் பகுதிகளை வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு, நோய் குறித்து ஆராய்ச்சி செய்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில் குள்ளப்பநாயக்கன்பட்டி, கதிராநல்லூர், பாச்சல், கடந்தபட்டி, மொஞ்சனூர், வளையப்பட்டி, வெண்ணந்தூர், கல்லுபாளையம், பட்டணம், கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வெங்காயம் அழுகல் மற்றும் பூஞ்சான நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பிரத்தேயக செய்தி கடந்த 8-ம் தேதி ஈ டிவி பாரத் தமிழ்நாட்டில் ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ், இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து உயர் அதிகாரிகள் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேளாண்மை துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார். இதனையடுத்து சென்னை தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கண்ணன், வேளாண் பல்கலை கழக விஞ்ஞானிகள் டாக்டர் சண்முகம், டாக்டர் வித்யா, டாக்டர் தெய்வமணி, மக்களவை உறுப்பினர் சின்ராஜ் மற்றும் நாமக்கல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் இன்று வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பயிர் சாகுபடி முறைகள், நோய் தாக்குதல், பாதிப்புகள், நோய்களுக்கு தெளிக்கப்பட்ட மருந்துகள், நீர் பாசன முறைகள் குறித்து கேட்டறிந்தும் நோய் தாக்கிய பயிர்களை ஆய்வு செய்து ஆராய்ச்சிக்காக எடுத்து சென்றனர். மேலும் நோய் தாக்குதலில் இருந்து வெங்காயத்தை காப்பது குறித்து ஆலோசனைகளையும் பாதிப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.


இதுகுறித்து தமிழக தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கண்ணன் நாமக்கல் மாவட்டத்தில் வெங்காயத்தில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டதாகவும் இதில் அனைத்து இடங்களிலும் 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பாதிப்பு உள்ளதாகவும் இதுகுறித்து அரசுக்கு அறிக்கையளித்து நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.


வெங்காய வயல்களை ஆய்வு செய்து அழுகல் நோய் பாதிப்புக்குள்ளான பயிர்களை சேகரம் செய்துள்ளதாகவும் இதில் பூஞ்சானம்,வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வருங்காலங்களில் நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை காக்க முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார் வேளாண் விஞ்ஞானி சண்முகம்.


இப்பகுதியில் வெங்காயம் சாகுபடி அதிகளவில் உள்ளதாகவும் நோய் தாக்குதலால் 2 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து விவசாயிகளை காக்க அதிகாரிகளை அழைத்து வந்து தீர்வு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார் நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ்.
Conclusion:
Last Updated : Nov 10, 2019, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.