ETV Bharat / state

நீரில் மூழ்கிய சிறுமியின் உடல் மீட்பு!

author img

By

Published : Apr 24, 2019, 7:54 PM IST

நாமக்கல்: காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமி ஹர்ஸ்விகாவின் உடல் மீட்கப்பட்டது.

நீரில் மூழ்கிய சிறுமி உடல் 4கிமீ தொலைவில் மீட்பு!

நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். பிள்ளைகளின் விடுமுறை தினத்தை முன்னிட்டு, தன் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது அனைவரும் நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த சமயத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக ஒருவர் நீரில் மூழ்க, அவரை காப்பாற்றும் பொருட்டு ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து நீரில் மூழ்கிய 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.

ஆனால் ஹர்ஸ்விகா என்ற சிறுமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுமியின் உடல் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து, 4 கிமீ தொலைவில் உள்ள அணிச்சம்பாளையம் என்ற கிராமத்தில் மீட்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். பிள்ளைகளின் விடுமுறை தினத்தை முன்னிட்டு, தன் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது அனைவரும் நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த சமயத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக ஒருவர் நீரில் மூழ்க, அவரை காப்பாற்றும் பொருட்டு ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து நீரில் மூழ்கிய 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.

ஆனால் ஹர்ஸ்விகா என்ற சிறுமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுமியின் உடல் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து, 4 கிமீ தொலைவில் உள்ள அணிச்சம்பாளையம் என்ற கிராமத்தில் மீட்கப்பட்டது.

Intro:நீரில் மூழ்கிய சிறுமி ஹர்ஸ்விகா உடல் கிடைத்தது


Body:நாமக்கல் பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூர் என்னும் கிராமத்தை சேர்ந்த சரவணன் ஜோதி தம்பதியனர். இவர்களுக்கு தாரகேஷ், தீபகேஷ் என்ற பத்து வயதில் இரட்டை மகன்கள் உள்ளனர். சரவணன் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியில் புகைப்பட கலைஞராக உள்ளர். இவரது மகன்களுக்கு பள்ளியில் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடனும் ஜோதியின் உறவினரான தேவிஶ்ரீ மற்றும் அவரது மகள் ஹர்சிகா ஆகியோர் நேற்று காலை பொத்தனூரில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் அமர்ந்து உணவு உட்கொண்ட பிறகு ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் தாரகேஷ் நீரில் மூழ்கினார்.சிறுவனை காப்பாற்ற சென்ற தந்தை சரவணனும் நீரில் மூழ்கினார். அடுத்தடுத்து ஒருவர் பின ஒருவராக காப்பாற்ற சென்ற ஆறு பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.


இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட குழுக்களுடன் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு ஐந்து பேரின் உடலை மீட்டனர். ஆனால் சிறுமி ஹர்சிகா உடலை தேடும் பணி மட்டும் நேற்று மாலை 7 மணி ழரை தொடர்ந்தது. பின்னர் போதிய வெளிச்சம் கிடைக்காத.சூழ்நிலையில் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக காலை 6 மணி அளவில் சிறுமி ஹர்சிகா உடலை தேடும் பணி தொடங்கியது. இரண்டு பரிசல்கள் மூலம் தற்போது நான்கு மணி நேராமாக தேடுதல் பணி நீடித்தத்து இந்நிலையில் சிறுமி ஹர்ஸ்விகா உடல் சம்பவ இடத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணிச்சம்பாளையம் என்ற கிராமத்தில் கிடைத்தது. அதனை போலிசார் பிரேத பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.