ETV Bharat / state

நாமக்கல்லில் முட்டை விலை அதிகம்: ஆந்திரா, கர்நாடகாவுக்கு படையெடுக்கும் வியாபாரிகள்! - நாமக்கலில் முட்டை விலை அதிகம்

நாமக்கல்: பிற மண்டலங்களை காட்டிலும் நாமக்கலில் முட்டை விலை அதிகமாக இருப்பதால், வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகாவுக்கு படையெடுக்கின்றனர்.

நாமக்கலில் முட்டை விலை அதிகம்: பெங்களூரு, ஹைதராபாத்துக்கு படையெடுக்கும் வியாபாரிகள்!
author img

By

Published : May 28, 2019, 12:35 PM IST

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப் பண்ணைகள் வரை உள்ளன. இங்கு 5 கோடி கோழிகள் மூலம், நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தற்போது கோடை காலமாக இருப்பதாலும், பள்ளிகள் விடுமுறையாலும் முட்டைகள் பெருமளவு பண்ணைகளில் தேங்கி வருகின்றன. பிற மண்டலங்களைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகமாக இருப்பதால், வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்குவதில் ஆர்வம்காட்ட மறுக்கின்றனர்.வியாபாரிகள் குறைந்த விலை கிடைக்கும் அண்டை மாநிலங்களை தேடி செல்கின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அதிகப்படியான விலை வைப்பதாக கூறி, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற ஒன்று உதயமானது. அவர்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் 50 காசுகள் வரை குறைத்தே விலை நிர்ணயம் செய்கின்றனர். அவ்வாறு இருந்தும் வியாபாரிகள் முட்டைகளை வாங்க முன்வருவதில்லை. இதனால், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் 12 கோடி அளவில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இது தொடர்பாக, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், கடந்த ஒரு மாதமாக முட்டை விலையானது, அண்டை மாநிலத்திற்கும், நாமக்கல் மண்டலத்திற்கும் இடையே 70 காசுகள் வரை வித்தியாசம் உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு சரியான விலையை நிர்ணயம் செய்வதில்லை. இதனால் நாமக்கல் கோழிப்பண்ணைகளை நாடி வந்த வியாபாரிகள், தற்போது ஆந்திரா, கர்நாடகாவிற்கு செல்கின்றனர்.

நாமக்கலில் முட்டை விலை அதிகம்: பெங்களூரு, ஹைதராபாத்துக்கு படையெடுக்கும் வியாபாரிகள்!

இது தொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணபை்புக் குழு தலைவரான டாக்டர் செல்வராஜிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. இதனால் முட்டை விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய கோரிக்கை. முட்டை விலையை குறைத்தால்தான், ஒன்றிரண்டு வாங்கும் மக்கள், கூடுதலாக நான்கு, ஐந்து என வாங்குவர் என தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப் பண்ணைகள் வரை உள்ளன. இங்கு 5 கோடி கோழிகள் மூலம், நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தற்போது கோடை காலமாக இருப்பதாலும், பள்ளிகள் விடுமுறையாலும் முட்டைகள் பெருமளவு பண்ணைகளில் தேங்கி வருகின்றன. பிற மண்டலங்களைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகமாக இருப்பதால், வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்குவதில் ஆர்வம்காட்ட மறுக்கின்றனர்.வியாபாரிகள் குறைந்த விலை கிடைக்கும் அண்டை மாநிலங்களை தேடி செல்கின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அதிகப்படியான விலை வைப்பதாக கூறி, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற ஒன்று உதயமானது. அவர்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் 50 காசுகள் வரை குறைத்தே விலை நிர்ணயம் செய்கின்றனர். அவ்வாறு இருந்தும் வியாபாரிகள் முட்டைகளை வாங்க முன்வருவதில்லை. இதனால், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் 12 கோடி அளவில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இது தொடர்பாக, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், கடந்த ஒரு மாதமாக முட்டை விலையானது, அண்டை மாநிலத்திற்கும், நாமக்கல் மண்டலத்திற்கும் இடையே 70 காசுகள் வரை வித்தியாசம் உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு சரியான விலையை நிர்ணயம் செய்வதில்லை. இதனால் நாமக்கல் கோழிப்பண்ணைகளை நாடி வந்த வியாபாரிகள், தற்போது ஆந்திரா, கர்நாடகாவிற்கு செல்கின்றனர்.

நாமக்கலில் முட்டை விலை அதிகம்: பெங்களூரு, ஹைதராபாத்துக்கு படையெடுக்கும் வியாபாரிகள்!

இது தொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணபை்புக் குழு தலைவரான டாக்டர் செல்வராஜிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. இதனால் முட்டை விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய கோரிக்கை. முட்டை விலையை குறைத்தால்தான், ஒன்றிரண்டு வாங்கும் மக்கள், கூடுதலாக நான்கு, ஐந்து என வாங்குவர் என தெரிவித்தனர்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 27


நாமக்கல் மண்டலத்தில் 12 கோடி முட்டைகள் தேக்கம்
பெங்களூரு, ஹைதராபாத்துக்கு வியாபாரிகள் படையெடுப்பு

பிற மண்டலங்களைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகப்படியாக உள்ளதால், பெங்களூரு, ஹைதராபாத்தில் முட்டையை வாங்குவதற்காக வியாபாரிகள் வாகனங்களில் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனை தடுக்க விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவை, கோழிப்பண்ணையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 பண்ணைகள் வரை உள்ளன. இங்குள்ள 5 கோடி கோழிகள் மூலம், நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தற்போது கோடை காலமாக இருப்பதாலும், பள்ளிகள் விடுமுறையாலும் முட்டைகள் பெருமளவு பண்ணைகளில் தேங்கி வருகின்றன. பிற மண்டலங்களைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகமாக இருப்பதால், வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்குவதில் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். குறைந்த விலை கிடைக்கும் அண்டை மாநிலங்களை தேடி செல்கின்றனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அதிகப்படியான விலை வைப்பதாக கூறி, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற போட்டி சங்கம் ஒன்று உதயமானது. அவர்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் 50 காசுகள் வரை குறைத்தே விலை நிர்ணயம் செய்கின்றனர். அவ்வாறு இருந்தும் வியாபாரிகள் முட்டைகளை வாங்க முன்வருவதில்லை. இதனால், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் 12 கோடி அளவில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இது தொடர்பாக, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.என்.மோகன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் சுந்தரம், துணை செயலாளர் டி.தர்மலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியது; கடந்த ஒரு மாதமாக முட்டை விலையானது, அண்டை மாநிலத்திற்கும், நாமக்கல் மண்டலத்திற்கும் இடையே 70 காசுகள் வரை வித்தியாசம் உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு சரியான விலையை நிர்ணயம் செய்வதில்லை.
நாமக்கல் கோழிப்பண்ணைகளை நாடி வந்த வியாபாரிகள், தற்போது ஆந்திராவில் ரூ.3–க்கு  விற்பதால் அங்கு சென்று வாங்குகின்றனர். கர்நாடகாவில் ரூ.2.90–க்கு விற்கின்றனர். இங்கு, 50 காசுகள் குறைத்தபோதும் வாங்க ஆளில்லை. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அதிக விலையை நிர்ணயிக்கும்போது, வியாபாரிகள் கூடுதலாக ஒரு ரூபாய்  வரை விலை வைத்து விற்கின்றனர். இதனால் வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அண்டை மாநிலத்தில் இருந்து எடுத்து வர ஒரு முட்டைக்கு 25 காசுகள் தான் செலவாகும். இதனால் முட்டை ஏற்றிச் செல்லும் லாரிகள் அங்கு பறந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணபை்புக் குழு தலைவரான டாக்டர் செல்வராஜிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. அந்த குழுவில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தான் அனுமதி உண்டு. அங்கு எவ்வித விலை நிர்ணய கூட்டமும் நடத்தப்படவில்லை. அதில் உறுப்பினர்களாக உள்ள சிலர் வெளியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்கின்றனர். 

கட்செவி(வாட்ஸ் அப்)யில் வரும் விலையை வைத்தே இங்கு விலை நிர்ணயமானது நடைபெறுகிறது. முட்டை விலையை குறைக்க வேண்டும் என்பது தான்  எங்களுடைய முக்கிய கோரிக்கை. முட்டை விலையை குறைத்தால் தான், ஒன்றிரண்டு வாங்கும் மக்கள், கூடுதலாக நான்கு, ஐந்து என வாங்குவர்.
நாமக்கல் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள ஏ.கே.பி.சின்ராஜ், கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவராகவும் இருப்பதால் எங்களது கோரிக்கையை முன்வைப்போம். வரும் நாட்களில் விலையை குறைக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் முன்வராவிட்டால், அனைத்து மண்டலங்களின் தலைவராகவுள்ள அனுராதா தேசாயிடம், நாமக்கல் மண்டல தலைவரான செல்வராஜ் பற்றி புகார் தெரிவிப்போம் என்றனர்.


SCRIPT IN MAIL
VISUL IN FTP

FILE NAME : TN_NMK_05_27_EGG_COMMITTEE_VIS_7205944

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.