ETV Bharat / state

குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா நகராட்சி ஆணையர்?

நாமக்கல்: கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By

Published : Jul 7, 2019, 7:52 AM IST

குடிநீருடன் கழிவுநீர் கலந்து விநியோகிக்கப்படும் அவலம்

நாமக்கல் நகராட்சி 15ஆவது வார்டு பவுண்டு தெருவில், கடந்த மூன்று மாதங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல், கடந்த சில வாரங்களாகவே நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் சென்று புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில், நேற்று மீண்டும் திறக்கப்பட்ட குடிநீரானது, முன்புபோலவே கருமையான நிறத்துடனும் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வந்ததுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கழிவு நீர் கலந்த குடிநீர்
கழிவுநீர் கலந்த குடிநீர்

இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த நியாமத் பேசுகையில், தங்களது பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து மாசடைந்த நிலையில் வருவது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், இந்த குடிநீரை பருகுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சாலை மறியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கழிவுநீர் கலந்த குடிநீர் வழங்கும் நாமக்கல் நகராட்சிக்கு பொதுமக்கள் கண்டனம்

நாமக்கல் நகராட்சி 15ஆவது வார்டு பவுண்டு தெருவில், கடந்த மூன்று மாதங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல், கடந்த சில வாரங்களாகவே நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் சென்று புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில், நேற்று மீண்டும் திறக்கப்பட்ட குடிநீரானது, முன்புபோலவே கருமையான நிறத்துடனும் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வந்ததுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கழிவு நீர் கலந்த குடிநீர்
கழிவுநீர் கலந்த குடிநீர்

இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த நியாமத் பேசுகையில், தங்களது பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து மாசடைந்த நிலையில் வருவது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், இந்த குடிநீரை பருகுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சாலை மறியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கழிவுநீர் கலந்த குடிநீர் வழங்கும் நாமக்கல் நகராட்சிக்கு பொதுமக்கள் கண்டனம்
Intro:நாமக்கல்லில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து விநியோகிக்கப்படும் அவலம். நடவடிக்கை எடுப்பாரா நகராட்சி ஆணையர் சுதா ?


Body:நாமக்கல் நகராட்சி 15 வது வார்டு பவுண்டு தெரு உள்ளது. இங்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அந்த குடிநீரும் மூன்று மாதங்களாகவே முறையாக வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து கருமையான நிறத்தில் வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் சென்று புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் நேற்று இரவு நகராட்சி சார்பில் பைப் லைன் மூலம் திறக்கப்பட்ட குடிநீரானது கடந்த காலங்களில் வந்ததை போல் கருமையான நிறத்துடனும் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வந்ததுள்ளது. இதனை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த குடிநீரை பருகவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த நியாமத் பேசுகையில் "தங்களது பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து மாசடைந்து நிலையில் வருவது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம்சாட்டினார். மேலும் இந்த குடிநீரை பருகுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மறியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்".


இதன்பிறகு பேசிய அதேபகுதியை சேர்ந்த நிர்மலா "தங்களுக்கு 2 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கலந்த குடிநீரே வருவதாகவும், இதனையே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், குடிப்பதற்கு மட்டும் கேன் தண்ணீர் பயன்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தார். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ".

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகிக்கப்படுவது குறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.