ETV Bharat / state

‘சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்’ - நாமக்கல் ஆட்சியர்!

author img

By

Published : Nov 22, 2019, 9:34 PM IST

நாமக்கல்: மாணவர்கள் சம்பாதிக்கும் போது சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Namakkal

நாமக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துகொண்டார். பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய அவர் கூறுகையில், "பள்ளி காலத்திலிருந்தே மாணவர்கள் சேமிப்பில் ஈடுபட வேண்டும்‌.

பணத்தை சிறுக சிறுக சேமித்தால் தான் சம்பாதிப்பதின் அருமை தெரியவரும். மாணவர்கள் நன்கு படித்து உயரிய பதவிகளுக்குச் செல்லும் காலங்களில் சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்.

உலக சிக்கன நாள் விழா

ஒருவர் பள்ளியிலிருந்தே பணத்தைச் சேமிக்க பழகிவிட்டால், வளர்ந்த பின் அப்பழக்கம் அவர்களின் வாழ்வை எளிதாக்கும். சேமிப்பின் அவசியம் குறித்து ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து ஆட்சியர் பள்ளிகளில் நடைப்பெற்ற சிறு சேமிப்பு குறித்த கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வாள் வீச்சு போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு!

நாமக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துகொண்டார். பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய அவர் கூறுகையில், "பள்ளி காலத்திலிருந்தே மாணவர்கள் சேமிப்பில் ஈடுபட வேண்டும்‌.

பணத்தை சிறுக சிறுக சேமித்தால் தான் சம்பாதிப்பதின் அருமை தெரியவரும். மாணவர்கள் நன்கு படித்து உயரிய பதவிகளுக்குச் செல்லும் காலங்களில் சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்.

உலக சிக்கன நாள் விழா

ஒருவர் பள்ளியிலிருந்தே பணத்தைச் சேமிக்க பழகிவிட்டால், வளர்ந்த பின் அப்பழக்கம் அவர்களின் வாழ்வை எளிதாக்கும். சேமிப்பின் அவசியம் குறித்து ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து ஆட்சியர் பள்ளிகளில் நடைப்பெற்ற சிறு சேமிப்பு குறித்த கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வாள் வீச்சு போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு!

Intro:சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் நாமக்கல்லில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பள்ளி மாணவர்களிடையே பேச்சுBody:நாமக்கல்லில் உலக சிறுசேமிப்பு சிக்கன நாள் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆட்சியர் பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் பள்ளி காலத்தில் இருந்தே மாணவர்கள் சேமிப்பில் ஈடுபட வேண்டும்‌. பணத்தை சிறுக சிறுக சேமித்தால் தான் பணம் சம்பாதிப்பதின் அருமை தெரியவரும். மாணவர்கள் நன்கு படித்து உயரிய பதவிகளுக்கு வரும் போது சம்பாதித்ததில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் பள்ளியிலிருந்தே பணத்தை சேமிக்க பழகிவிட்டால் வளர்ந்த பின் நல் வாழ்க்கையை வாழ முடியும். இதனை பள்ளி வகுப்பறையில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் பள்ளிகளில் நடைப்பெற்ற சிறுசேமிப்பு குறித்த கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.