ETV Bharat / state

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு!

author img

By

Published : Jan 15, 2020, 8:54 PM IST

நாமக்கல்: திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

naveena jallikkattu
naveena jallikkattu

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை.

ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் காளைக்கு பதிலாக கோழி, காளையர்களுக்கு பதிலாக பெண்கள் கோழியை பிடிக்க வேண்டும். கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த நவீன ஜல்லிக்கட்டில் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. காளையைகூட பிடித்துவிடலாம். கோழியை பிடிப்பது கடினம். ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

போட்டியில் ஒரு கயிறு போட்டியாளரின் காலில் கட்டப்படும் அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல் கோழியை பிடிக்க வேண்டும். கயிற்றை கையில் பிடித்தோ, காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பது நிபந்தனை. சீறிவரும் காளையை பிடிப்பது ஜல்லிக்கட்டு என்றால் கண்களைக் கட்டிக்கொண்டு கோழியை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டாகும்.

பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு

இந்த போட்டியில் பெண்கள், சிறுமிகள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த நவீன ஜல்லிக்கட்டு அந்தப் பகுதி மக்களிடம் பிரபலமடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை.

ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் காளைக்கு பதிலாக கோழி, காளையர்களுக்கு பதிலாக பெண்கள் கோழியை பிடிக்க வேண்டும். கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இந்த நவீன ஜல்லிக்கட்டில் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. காளையைகூட பிடித்துவிடலாம். கோழியை பிடிப்பது கடினம். ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

போட்டியில் ஒரு கயிறு போட்டியாளரின் காலில் கட்டப்படும் அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல் கோழியை பிடிக்க வேண்டும். கயிற்றை கையில் பிடித்தோ, காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பது நிபந்தனை. சீறிவரும் காளையை பிடிப்பது ஜல்லிக்கட்டு என்றால் கண்களைக் கட்டிக்கொண்டு கோழியை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டாகும்.

பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு

இந்த போட்டியில் பெண்கள், சிறுமிகள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த நவீன ஜல்லிக்கட்டு அந்தப் பகுதி மக்களிடம் பிரபலமடைந்துள்ளது.

Intro:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டி, பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்புBody:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளையர்கள் காளைகளை பிடிப்பது வழக்கம். இதில் பெண்களுக்கு அனுமதியில்லை. இது குறித்த நகைச்சுவையாக சிந்தித்த இந்தப்பகுதி இளைஞர்கள் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒரு போட்டியை ஏற்பாடு செய்து அந்தப்போட்டியில் கோழியை பிடிப்பது என்றும் அதுவும் பெண்கள் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்து நடத்தி வருகின்றனர். ஒரு பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். போட்டியில் ஒரு கயிறு போட்டியாளரின் காலில் கட்டப்படும் அதன் மறுமுனை கோழியின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல் கோழியை பிடிக்க வேண்டும் என்பதும் கயிற்றை கையில் பிடித்தோ காலில் பிடித்தோ இழுக்கக் கூடாது என்பதும் நிபந்தனை. சீறிவரும் காளை பிடிப்பது ஜல்லிக்கட்டு என்றால் கண்களைக் கட்டிக் கொண்டு கோழியை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டு ஆகும். இந்த போட்டியில் பெண்கள், சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.