ETV Bharat / state

எஸ்பிஐ ஏடிஎம்-யில் கள்ள நோட்டுகள்; அரசு ஊழியர் அதிர்ச்சி!

author img

By

Published : Jul 15, 2019, 11:46 PM IST

நாமக்கல்: எஸ்பிஐ ஏடிஎம்-யில் பணம் எடுத்த மின்வாரிய ஊழியருக்கு, கள்ள நோட்டுகள் கிடைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fake

சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை மூர்த்தி தனது சம்பளப் பணத்தை எடுக்க நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள ஏடிஎம்-யில் இரண்டு கட்டங்களாக ரூ.40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.

அதில் வந்த இரண்டாயிரம் நோட்டுகள் ஐந்தும் கிழிந்தும், ஒட்டப்பட்டும், நிறம் மாறியும் கள்ள நோட்டுகள் போல் இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூர்த்தி வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்

அதற்கு வங்கி மேலாளர், உங்களது வங்கிக் கணக்கை தெரிவியுங்கள். பணம் கணக்கில் செலுத்தப்படும் என அலட்சியமாக பதில் அளித்து, மூர்த்தியை அங்கிருந்து கிளப்பிவிட முனைப்பு காட்டியுள்ளனர். இது குறித்து மூர்த்தி நாமக்கல் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூர்த்தியிடம் விசாரணை செய்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்து வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளநோட்டுகள் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்யும் காட்சிகள்

இதனைத் தொடர்ந்து, மூர்த்திக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மாற்று ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த சம்பவம் பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏடிஎம் உள்ளே எப்படி கள்ளநோட்டுகள் சென்றது என்பது குறித்து நாமக்கல் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை மூர்த்தி தனது சம்பளப் பணத்தை எடுக்க நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள ஏடிஎம்-யில் இரண்டு கட்டங்களாக ரூ.40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.

அதில் வந்த இரண்டாயிரம் நோட்டுகள் ஐந்தும் கிழிந்தும், ஒட்டப்பட்டும், நிறம் மாறியும் கள்ள நோட்டுகள் போல் இருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூர்த்தி வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்

அதற்கு வங்கி மேலாளர், உங்களது வங்கிக் கணக்கை தெரிவியுங்கள். பணம் கணக்கில் செலுத்தப்படும் என அலட்சியமாக பதில் அளித்து, மூர்த்தியை அங்கிருந்து கிளப்பிவிட முனைப்பு காட்டியுள்ளனர். இது குறித்து மூர்த்தி நாமக்கல் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூர்த்தியிடம் விசாரணை செய்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்து வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளநோட்டுகள் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்யும் காட்சிகள்

இதனைத் தொடர்ந்து, மூர்த்திக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மாற்று ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த சம்பவம் பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏடிஎம் உள்ளே எப்படி கள்ளநோட்டுகள் சென்றது என்பது குறித்து நாமக்கல் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:நாமக்கல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎமில் 10 ஆயிரம் ரூபாய் கிழிந்த மற்றும் ஒட்டப்பட்ட நிலையில் கள்ளநோட்டுகள்


Body:நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை மூர்த்தி தனது சம்பள பணத்தை எடுக்க நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுத்துள்ளார். அப்போது 2 கட்டங்களாக அவர் 40 ஆயிரம் பணத்தை அவர் எடுத்துள்ளார். அதில் வந்த 5 இரண்டாயிரம் நோட்டுகள் என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிழிந்தும், ஒட்டப்பட்டும், கலர் மாறியும் கள்ள நோட்டுகள் போல் இருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு வங்கி மேலாளர் உங்களது வங்கி கணக்கை தெரிவியுங்கள் பணம் கணக்கில் செலுத்தப்படும் என அலட்சியமாக பதில் அளித்து, மூர்த்தியை அங்கிருந்து கிளம்ப நிர்பந்தித்ததாக தெரிகிறது. உடனடியாக மூர்த்தி நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூர்த்தியிடம் விசாரணை செய்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மூர்த்திக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான மாற்று பணம் வழங்கப்பட்டது.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.