ETV Bharat / state

தட்டிக்கேட்டதால் அண்ணன் கத்தியால் வெட்டிக் கொலை

author img

By

Published : Apr 21, 2020, 4:26 PM IST

நாமக்கல்: தங்கைக்காக தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கும்பல், தலைமறைவான இருவருக்கு எருமப்பட்டி காவல்துறையினர் வலை வீச்சு.

கத்தியால் குத்திக் கொலை
கத்தியால் குத்திக் கொலை

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கரிய பெருமாள் கரட்டுப்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் கெளதம் இவரது சகோதரி கெளசல்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் கெளசல்யா கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் கெளதமன், கோபி அவரது நண்பர்கள் மணிவண்ணன், சிவகுமார், மனோஜ் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும் அதே பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன், ரவிசந்திரன், பூவராகவன், மனோஜ் குமார் உள்ளிட்டோர் ஒரு கோஷ்டியாகவும் வலம் வந்துள்ளனர். இதில் இரு கோஷ்டிகளுக்கும் முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ராமசந்திரன் கர்ப்பிணியான கெளசல்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திக் கொலை

இதனையறிந்த கெளதமன் தனது நண்பர்களுடன் எதிர் கோஷ்டியினரிடம் நேற்று இரவு தட்டி கேட்டுள்ளார். வாய் தகராறு முற்றிய நிலையில் ராமசந்திரன் அவரது தம்பி ரவிசந்திரன் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கெளதம், கோபி ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ராமசந்திரன், மனோஜ்குமார் இருவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து விட ரவிசந்திரனும், பூவராகவனும் தப்பி ஓடி விட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமசந்திரன், மனோஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தவறான முடிவுகள்: ரேபிட் பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான்

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கரிய பெருமாள் கரட்டுப்புதூர் பகுதியில் வசித்து வந்தவர் கெளதம் இவரது சகோதரி கெளசல்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் கெளசல்யா கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் கெளதமன், கோபி அவரது நண்பர்கள் மணிவண்ணன், சிவகுமார், மனோஜ் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும் அதே பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன், ரவிசந்திரன், பூவராகவன், மனோஜ் குமார் உள்ளிட்டோர் ஒரு கோஷ்டியாகவும் வலம் வந்துள்ளனர். இதில் இரு கோஷ்டிகளுக்கும் முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ராமசந்திரன் கர்ப்பிணியான கெளசல்யாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

தட்டிக்கேட்ட அண்ணனை கத்தியால் குத்திக் கொலை

இதனையறிந்த கெளதமன் தனது நண்பர்களுடன் எதிர் கோஷ்டியினரிடம் நேற்று இரவு தட்டி கேட்டுள்ளார். வாய் தகராறு முற்றிய நிலையில் ராமசந்திரன் அவரது தம்பி ரவிசந்திரன் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கெளதம், கோபி ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ராமசந்திரன், மனோஜ்குமார் இருவரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து விட ரவிசந்திரனும், பூவராகவனும் தப்பி ஓடி விட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோபி மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமசந்திரன், மனோஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தவறான முடிவுகள்: ரேபிட் பரிசோதனையை நிறுத்திய ராஜஸ்தான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.