ETV Bharat / state

அழுகிய நிலையில் காங்கிரஸ் பிரமுகர் உடல் மீட்பு! - Namakkal District News

நாமக்கல்: ராசிபுரம் அருகே காங்கிரஸ் பிரமுகரின் உடலை அழுகிய நிலையில் வெண்ணந்தூர் காவல் துறையினர் மீட்டனர்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்
author img

By

Published : Sep 7, 2020, 7:38 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் வெண்ணந்தூர் ஒன்றிய காங்கிரஸ் பிரமுகராவார். இவர் வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில் திடீரென்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பன்னீர்செல்வம் அழுகிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

அவரது சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் வெண்ணந்தூர் ஒன்றிய காங்கிரஸ் பிரமுகராவார். இவர் வீட்டில் தனியாக வசித்துவந்த நிலையில் திடீரென்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பன்னீர்செல்வம் அழுகிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

அவரது சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இச்சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.