நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக வெண்ணந்தூர் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் மாணிக்கத்தின் வீட்டின் பின்புறம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 15 கிலோ கஞ்சா செடிகளை அவர் வளர்த்து பராமரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்ததோடு, மாணிக்கத்தையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணிக்கம் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததும், அதிக விலை கொடுத்து கஞ்சாவை வாங்க முடியாததால், தனது வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளைத் தானே வளர்த்து வந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் விலையுயர்ந்த போதைப்பொருள்கள் விற்பனை: ஒருவர் கைது!