ETV Bharat / state

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

author img

By

Published : Aug 1, 2020, 10:15 PM IST

நாமக்கல்: கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி, இன்று (ஆகஸ்ட் 1) குணமடைந்து வீடு திரும்பினார்.

an-enthusiastic-welcome-to-minister-thangamani-who-has-returned-after-coronation-treatment
an-enthusiastic-welcome-to-minister-thangamani-who-has-returned-after-coronation-treatment

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் இரண்டரை லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த வாரம் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்தார்.

இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையம் பகுதிக்கு வந்தபோது, பொதுமக்கள், அதிமுகவினர் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கரோனோ சிகிச்சை முடிந்து திரும்பிய அமைச்சர் தங்கமணிக்கு உற்சாக வரவேற்பு

பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் அமைச்சருக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் பரிவட்டம் கட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:அயோத்தி பூமி பூஜை: திருவாரூரிலிருந்து புனித நீர், மணல் அனுப்பி வைப்பு!

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையும் இரண்டரை லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த வாரம் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்தார்.

இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையம் பகுதிக்கு வந்தபோது, பொதுமக்கள், அதிமுகவினர் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கரோனோ சிகிச்சை முடிந்து திரும்பிய அமைச்சர் தங்கமணிக்கு உற்சாக வரவேற்பு

பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் அமைச்சருக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் பரிவட்டம் கட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:அயோத்தி பூமி பூஜை: திருவாரூரிலிருந்து புனித நீர், மணல் அனுப்பி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.