ETV Bharat / state

வார்டு மறுவரையறையில் குளறுபடி - தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு! - People decision to Ignoring local body election

நாகை: தொடுவாய் மீனவ கிராம மக்கள் வார்டு மறுவரையறையில் குளறுபடியுள்ளதால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

naagai
naagai
author img

By

Published : Dec 15, 2019, 10:25 AM IST

நாகை மாவட்டம் வேட்டங்குடி ஊராட்சிக்குட்பட்ட தொடுவாய் மீனவர் கிராமத்தில் நான்கு வார்டுகளில் மொத்தம் 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். வருகின்ற 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொடுவாய் மீனவ கிராமத்திலுள்ள வார்டுகளை அலுவலர்கள் மறுவரையறை செய்தனர்.

மறுவரையறையில் நான்காவது வார்டிலுள்ள 624 வாக்குகளை தொடுவாய் மீனவர் கிராமத்திலிருந்து அருகிலுள்ள திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு மாற்றியுள்ளனர். திருமுல்லைவாசல், வேட்டங்குடி ஊராட்சிக்கு வெவ்வேறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் போட்டியிடுவதால் மக்கள் வாக்களிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடுவாய் மீனவ கிராம மக்கள்

இதுதொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் கிராமக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொடுவாய் மீனவர் கிராம மக்கள், நான்காவது வார்டிலுள்ள அனைத்து வாக்காளர்களையும் பழையபடி வேட்டங்குடி ஊராட்சிக்கு மாற்ற சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கோரிக்கை வைப்பதாகவும், கோரிக்கை நிறைவேறாவிட்டால் வருகிற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊராட்சி வார்டு பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு!

நாகை மாவட்டம் வேட்டங்குடி ஊராட்சிக்குட்பட்ட தொடுவாய் மீனவர் கிராமத்தில் நான்கு வார்டுகளில் மொத்தம் 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். வருகின்ற 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொடுவாய் மீனவ கிராமத்திலுள்ள வார்டுகளை அலுவலர்கள் மறுவரையறை செய்தனர்.

மறுவரையறையில் நான்காவது வார்டிலுள்ள 624 வாக்குகளை தொடுவாய் மீனவர் கிராமத்திலிருந்து அருகிலுள்ள திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு மாற்றியுள்ளனர். திருமுல்லைவாசல், வேட்டங்குடி ஊராட்சிக்கு வெவ்வேறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் போட்டியிடுவதால் மக்கள் வாக்களிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடுவாய் மீனவ கிராம மக்கள்

இதுதொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் கிராமக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொடுவாய் மீனவர் கிராம மக்கள், நான்காவது வார்டிலுள்ள அனைத்து வாக்காளர்களையும் பழையபடி வேட்டங்குடி ஊராட்சிக்கு மாற்ற சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கோரிக்கை வைப்பதாகவும், கோரிக்கை நிறைவேறாவிட்டால் வருகிற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊராட்சி வார்டு பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு!

Intro:தொடுவாய் மீனவ கிராமத்தில் வார்டு மறுவரையரையின் போது குளறுபடி. உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் :-Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 4 வார்டுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்ற 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.அதற்காக அதிகாரிகள் தொடுவாய் மீனவ கிராமத்தில் உள்ள வார்டுகளை மறுவரையரை செய்துள்ளனர். அதிகாரிகள் வார்டு மறுவரையறை செய்யும்பொழுது 4வது வார்டில் உள்ள 624 வாக்குகளை அருகிலுள்ள திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு மாற்றியுள்ளனர். திருமுல்லைவாசல் மற்றும் வேட்டங்குடி ஊராட்சிக்கு வேறுவேறு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் போட்டியிடுவதால் மக்கள் வாக்களிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று கிராம பஞ்சாயத்து தலைவர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்தனர் இக்கூட்டத்தில் தொடுவாய் மீனவர் கிராமத்தில் நாலாவது வார்டில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் பழையபடி வேட்டங்குடி ஊராட்சி ஒன்றியக்குழு வார்டில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர் அவ்வாறு சேர்க்காவிட்டால் வருகின்றக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.