ETV Bharat / state

பள்ளி அருகே திறந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை...! - Underground sewer

நாகப்பட்டினம்: பள்ளியின் அருகே உள்ள பாதாள சாக்கடையின் ஆள்துழை தொட்டியின் மூடி உடைந்துள்ளதால், பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை தொட்டி
author img

By

Published : Jul 2, 2019, 3:43 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையான காமராஜர் வீதியல் உள்ள தனியார் பள்ளியின் முன்பு செல்லும் பாதாள சாக்கடை தொட்டியின் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் என்பதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இதுபோன்று பல இடங்களில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி அருகே திறந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் 2009ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையான காமராஜர் வீதியல் உள்ள தனியார் பள்ளியின் முன்பு செல்லும் பாதாள சாக்கடை தொட்டியின் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் என்பதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இதுபோன்று பல இடங்களில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் உள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி அருகே திறந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை
Intro:மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் பாதாள சாக்கடையின் ஆள்நுழைவு தொட்டியின் மூடி உடைப்பு. பள்ளியின் அருகே உள்ளதால் பெற்றோர்கள் அச்சம். அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் 2009 முதல் செயல்பட்டு வருகிறது. தரமுற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்;டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வரை மயிலாடுதுறை நகரத்தில் 10 இடங்களில் பாதாளசாக்கடை குழாய் உடைப்பால் 20அடி ஆழத்திற்கு மேல் பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டியின் மூடிகள் பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து உடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனே சாலையில் செல்கின்றனர். இன்று மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையான காமராஜர் வீதியல் உள்ள தனியார் பள்ளியின் முன்பு சாலையில் உள்ள பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டியின் மூடி உடைந்து கம்பிகள் மட்டுமே உள்ளது. வாகனங்கள் அதிகளவில் செல்லும் பகுதி என்பதால் குழந்தைகளை அழைக்க வரும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்பாக உடைந்த ஆள்நுழைவு தொட்டியின் முன்பு நின்று போக்குவரத்தை சரிசெய்கின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் காமராஜர் வீதி மற்றும் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள ஆள்நுழைவு தொட்டியின் மூடிகளை விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.