ETV Bharat / state

பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் நீரில் மூழ்கும் நெற்பயிர்கள்!

நாகை: சீர்காழி அருகே பொறைவாய்க்காலில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கரிலுள்ள நெற்பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

author img

By

Published : Dec 1, 2019, 10:01 PM IST

paddy-affected-by-heavy-rain
paddy-affected-by-heavy-rain

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள எடமணல் கிராமத்தில் பொறைவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விவசாய நிலங்களில் வீணாக பாய்ந்துவருகிறது. இதனால் சாகுபடிக்கு தயாரான நிலையிலுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில், சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா விதைப்பு மற்றும் நடவு பணி செய்தபோதும், கடைமடைக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேராததால் முதல் முறையாக நேரடி விதை செய்தது அனைத்தும் முளைக்காமல் வீணானது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் நல்ல நிலையில் நெற்பயிர்கள் வளர்த்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சீர்காழி பகுதியில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறு, வாய்க்கால்களும் நிரம்பியுள்ளது.

கனமழையால் நீரில் மூழ்கும் நெற்பயிர்கள்

ஆனாலும் கால்வாய்களை முறையாக தூர்வராமலும் கரைகளை பலப்படுத்தாமலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் செய்ததால் தற்போது கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாகுபடிக்கு தயாரான நிலையிலுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறை அலட்சியத்தால் ஆண்டுதோறும் இதே நிலைதான் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கழகத் தலைவரா? கழக தலைவரா? - பிழையை கண்டுகொள்ளாமல் விட்ட திமுகவினர்!

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள எடமணல் கிராமத்தில் பொறைவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விவசாய நிலங்களில் வீணாக பாய்ந்துவருகிறது. இதனால் சாகுபடிக்கு தயாரான நிலையிலுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில், சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா விதைப்பு மற்றும் நடவு பணி செய்தபோதும், கடைமடைக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேராததால் முதல் முறையாக நேரடி விதை செய்தது அனைத்தும் முளைக்காமல் வீணானது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் நல்ல நிலையில் நெற்பயிர்கள் வளர்த்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சீர்காழி பகுதியில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து ஆறு, வாய்க்கால்களும் நிரம்பியுள்ளது.

கனமழையால் நீரில் மூழ்கும் நெற்பயிர்கள்

ஆனாலும் கால்வாய்களை முறையாக தூர்வராமலும் கரைகளை பலப்படுத்தாமலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் செய்ததால் தற்போது கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாகுபடிக்கு தயாரான நிலையிலுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறை அலட்சியத்தால் ஆண்டுதோறும் இதே நிலைதான் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கழகத் தலைவரா? கழக தலைவரா? - பிழையை கண்டுகொள்ளாமல் விட்ட திமுகவினர்!

Intro:சீர்காழி அருகே பொறை வாய்க்கால் கரை உடைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பாதிப்பு பொதுப்பணித்துறை அலட்சியம் விவசாயிகள் குற்றச்சாட்டு:-Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் பொறைவாய்க்கால் கரை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது இதனால் சம்பா சாகுபடி செய்து உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த ஆண்டு சீர்காழி தாலுகாவில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பணி நேரடி விதைப்பு மற்றும் நடவு பணி செய்துள்ளனர் கடைமடைக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேராததால் முதல் முறை செய்த நேரடி விதை அனைத்தும் முளைக்காமல் பாழகிவிட்டது,இரண்டாவது முறையாக விவசாயிகள் தற்போது நேரடி விதைப்பு செய்து நல்ல நிலையில் நெற்பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது இதனால் சீர்காழி தாலுக்கா முழுவதும் பலத்த கனமழை பெய்து வருகிறது ஒரு வார காலத்தில் சுமார் 20 சென்டி மீட்டர் அளவிற்கு சீர்காழி மட்டும் மழை பெய்துள்ளது அனைத்து ஆறு மற்றும் வாய்க்கால் முழுவதும் தண்ணீர் செல்வதால் முறையாக தூர் வராமல் கரைகளை பலப்படுத்தாமலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் செய்ததால் தற்போது மழைநீர் அதிக அளவில் செல்வதால் கரைகள் அனைத்தும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் கரைகள் வழிந்தும் விவசாய நிலங்களில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வருட வருடம் இதே நிலைதான் ஏற்படுகிறது பொதுப்பணித்துறை அலட்சியம்தான் இதற்கு முழு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.