ETV Bharat / state

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - சாலையோரம் நின்றுகொண்டிருந்த விவசாயி தொழிலாளி உயிரிழப்பு

author img

By

Published : Jun 7, 2022, 2:17 PM IST

பாலையூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து சாலையோரம் நின்ற விவசாயி பலி
டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து சாலையோரம் நின்ற விவசாயி பலி

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (28). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். வழியில் மாந்தை மேல் அய்யனார்குடி என்ற இடத்தில் உள்ள நக்கம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்போன் அழைப்பு வந்ததை அடுத்து முருகானந்தம் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது கும்பகோணத்திலிருந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டீசலை ஏற்றிக்கொண்டு, காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி அதிவேகமாக வந்த போது ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே திருப்பத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து உள்ளது. இதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த முருகானந்தம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் வெளியேறியது.

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

உடனடியாக டேங்கர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பாலையூர் காவல்துறையினர் மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் விபத்து ஏற்படாமல் தடுக்க சாலையில் வழிந்தோடிய டீசல் மற்றும் வாகனத்தின் மீது, மயிலாடுதுறை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் நுரைகலவையை அடித்தனர். பின்பு பாதுகாப்பாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்.

விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முருகானந்தம் குடும்பத்திற்கு உடனடியாக உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் தப்பி ஓடிய ஓட்டுநரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த விபத்தால் கொல்லுமாங்குடியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை; ராஜஸ்தான் இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (28). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். வழியில் மாந்தை மேல் அய்யனார்குடி என்ற இடத்தில் உள்ள நக்கம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்போன் அழைப்பு வந்ததை அடுத்து முருகானந்தம் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது கும்பகோணத்திலிருந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டீசலை ஏற்றிக்கொண்டு, காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி அதிவேகமாக வந்த போது ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே திருப்பத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து உள்ளது. இதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த முருகானந்தம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் வெளியேறியது.

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

உடனடியாக டேங்கர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பாலையூர் காவல்துறையினர் மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் விபத்து ஏற்படாமல் தடுக்க சாலையில் வழிந்தோடிய டீசல் மற்றும் வாகனத்தின் மீது, மயிலாடுதுறை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் நுரைகலவையை அடித்தனர். பின்பு பாதுகாப்பாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்.

விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த முருகானந்தம் குடும்பத்திற்கு உடனடியாக உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் தப்பி ஓடிய ஓட்டுநரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த விபத்தால் கொல்லுமாங்குடியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை; ராஜஸ்தான் இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.