ETV Bharat / state

சுட்டெரிக்கும் கோடை: அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்!

author img

By

Published : Apr 12, 2021, 8:17 AM IST

நாகப்பட்டினம்: கோடை வெப்பத்தினால் ஏற்படும் தாகத்தைத் தணிக்க அதிமுக சார்பில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி நீர், மோர் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

கோடை வெப்பம்: அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
கோடை வெப்பம்: அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி அதிகமான வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டுமென அதிமுக கழக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீர், மோர் பந்தல் அமைக்க அறிவுறுத்தினர்.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதிமுக தேர்தல் அலுவலகத்தில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவருமான பி.வி. பாரதி நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தனர்.

பின்னர் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 30-39 வயதினரைக் குறிவைக்கும் கரோனா

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி அதிகமான வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டுமென அதிமுக கழக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீர், மோர் பந்தல் அமைக்க அறிவுறுத்தினர்.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதிமுக தேர்தல் அலுவலகத்தில் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவருமான பி.வி. பாரதி நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தனர்.

பின்னர் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 30-39 வயதினரைக் குறிவைக்கும் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.