ETV Bharat / state

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது!

author img

By

Published : Oct 4, 2019, 2:30 PM IST

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் வந்த எட்டு படகுகள் கடலோரக் காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

srilankan fishermen arrest

சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை முன்னிட்டும் பயங்கரவாத ஊடுருவலை கண்காணிக்கவும் வங்கக் கடலில் இந்திய கடலோரக் காவல்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கோடியக்கரை அருகே 45 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகிக்கும் வகையில் எட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட இந்திய கடலோரக் காவல் படையினர், அதன் அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இலங்கையைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 18 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான அனக் (ANAGH) என்ற கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டுவரப்பட்டனர்

இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது

காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்துவரப்பட்ட மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணம், எழந்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இலங்கை மீனவர்கள் சென்னை முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை முன்னிட்டும் பயங்கரவாத ஊடுருவலை கண்காணிக்கவும் வங்கக் கடலில் இந்திய கடலோரக் காவல்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கோடியக்கரை அருகே 45 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகிக்கும் வகையில் எட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட இந்திய கடலோரக் காவல் படையினர், அதன் அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இலங்கையைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 18 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான அனக் (ANAGH) என்ற கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டுவரப்பட்டனர்

இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது

காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்துவரப்பட்ட மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணம், எழந்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இலங்கை மீனவர்கள் சென்னை முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Intro:இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 18 பேர் 8 படகுகளுடன் கைது - காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்து வரப்பட்டு மீனவர்களிடம் தீவிர விசாரணை.Body:இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 18 பேர் 8 படகுகளுடன் கைது - காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்து வரப்பட்டு மீனவர்களிடம் தீவிர விசாரணை.


சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமரின் சென்னை வருகையை முன்னிட்டும், தீவிரவாத ஊடுருவலை கண்காணிக்க வங்க கடலில் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுருந்தனர். அப்போது கோடியக்கரை அருகே 45 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 8 படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்ததை கண்ட இந்திய கடலோர காவல்படையினர் , அதன் அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் இலங்கையை சேர்ந்த 18மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை மீனவர்கள் 18 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ANAGH என்ற கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டு வந்தனர். காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்துவரப்பட்ட மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் யாழ்ப்பாணம், எழந்தீவு பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் இலங்கை மீனவர்கள் சென்னை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.