ETV Bharat / state

மாயூரநாதர் கோயில் தேர் ஓடும் வீதியில் டாஸ்மாக் கடை - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!

author img

By

Published : Feb 6, 2022, 11:44 AM IST

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தேரோடும் வீதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தீடீர் டாஸ்மாக் கடை
தீடீர் டாஸ்மாக் கடை

மயிலாடுதுறை : மாயூரநாதர் கோயில் தேரோடும் வீதியான வடக்கு வீதி மயிலாடுதுறை - தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று புதிய டாஸ்மாக் கடை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு லாரி மூலம் மதுபானங்கள் வந்து இறங்கின. இதனைக் கண்ட வடக்கு வீதி அருகே உள்ள இந்திரா காலனி மக்கள் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் தேரோடும் வீதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைத்தால் ஐப்பசி மாதம் தினந்தோறும் நடைபெறும் சாமி வீதி உலாவிற்கு இடையூறு ஏற்படும். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புகள் அருகாமையில் இருப்பதால் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

பின்னர், தகவலறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மதுபான கடை மூடப்படும் என்ற வாக்குறுதியை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மதுபானக் கடையை திறக்க அனுமதித்த நிலையில் பிரதான சாலையில் மதுபானக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : நாதக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு - போரட்டத்தில் வேட்பாளர் சட்டை கிழிந்தது

மயிலாடுதுறை : மாயூரநாதர் கோயில் தேரோடும் வீதியான வடக்கு வீதி மயிலாடுதுறை - தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று புதிய டாஸ்மாக் கடை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு லாரி மூலம் மதுபானங்கள் வந்து இறங்கின. இதனைக் கண்ட வடக்கு வீதி அருகே உள்ள இந்திரா காலனி மக்கள் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் தேரோடும் வீதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைத்தால் ஐப்பசி மாதம் தினந்தோறும் நடைபெறும் சாமி வீதி உலாவிற்கு இடையூறு ஏற்படும். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புகள் அருகாமையில் இருப்பதால் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

பின்னர், தகவலறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மதுபான கடை மூடப்படும் என்ற வாக்குறுதியை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மதுபானக் கடையை திறக்க அனுமதித்த நிலையில் பிரதான சாலையில் மதுபானக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : நாதக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு - போரட்டத்தில் வேட்பாளர் சட்டை கிழிந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.